இது எனது இந்தியா கிடையாது.. சாத்தான்குளம் விவகாரம் பற்றி ஆனந்த் மஹிந்திரா கருத்து
மும்பை: சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு விவகாரத்தில் விரைவான, வெளிப்படையான விசாரணை நடத்தி நீதி பெற்று தரப்படவேண்டும் என்று மஹிந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மஹிந்திரா வலியுறுத்தியுள்ளார்.
சாத்தான்குளம் ஊரைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், இதையடுத்துதான், கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் உடல்நிலை மோசமடைந்து அடுத்தடுத்து மரணமடைந்தனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆங்கில செய்தி ஒன்றை ரீட்வீட் செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

ஆனந்த் மஹிந்திரா
அதில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பாருங்கள்: இது எனது இந்தியா கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையை கையாளுவதற்கு ஒரேவழி, விரைவான, வெளிப்படையான, நியாயமான விசாரணை மற்றும் அதற்கு ஈடாக வேகமான நீதி ஆகிய இரண்டும்தான் ஆகும். இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு டேக்
மேலும் தனது ட்விட்டர் பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் அக்கவுண்டை அவர் டேக் செய்துள்ளார். அதாவது, நேரடியாகவே, முதல்வரிடம், ஆனந்த் மஹிந்திரா தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பல நட்சத்திரங்கள்
முன்னதாக, ஹிந்தி திரையுலகின் பல நட்சத்திரங்கள், தமிழக திரையுலகில் நட்சத்திரங்கள் பலரும் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தங்களது கண்டனத்தை பதிவு செய்ததோடு குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Recommended Video

கிரிக்கெட் வீரர்கள்
இதேபோல, ஷிகர் தவான், அஸ்வின் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீசாரால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக சாத்தான்குளம் சம்பவத்தை பலரும் ஒப்பிட்டு வேதனை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications