புருஷன் என்று நினைத்து "கொழுந்தனுடன்.." அதுவும் 6 மாசமாம்.. கடைசியில் "அந்த" ட்விஸ்ட்டை பாருங்க
அண்ணியுடன் உறவு கொண்ட கொழுந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்
மும்பை: எல்லை மீறிய உறவு, தகாத உறவு, என்பதையெல்லாம் மிஞ்சிவிட்டது இந்த சம்பவம்.. மகாராஷ்டிர மாநிலமே ஷாக்கில் உள்ளது..!
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் பாலியல் வன்முறை அட்டகாசங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே காணாமல் போய் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் இதை பலமுறை எடுத்துரைத்தும், மாநில அரசுகள் பாலியல் குற்றங்களை குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை..
சிவப்பு கம்பள வரவேற்பில் மேலாடையின்றி ஓடிய பெண்! கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு! பின்னணி இதுதான்
அக்கிரமம்
தெரிந்தே இப்படி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கிறதென்றால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் அக்கிரமம் ஒன்று நடந்துள்ளது அனைவராலும் அதிர்ச்சியுடன் பார்க்கப்பட்டு வருகிறது.. மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள ரிங் ரோடு என்ற இடத்தில் வசித்து வருகிறார் அந்த இளைஞர்.. 20 வயதாகிறது.. இவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.. மணமக்கள் மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கையை துவக்கினர்.
அண்ணி
இவர்கள் வீட்டில், மணமகனுக்கு தம்பியும் உள்ளார்... இருவருமே ட்வின்ஸ்.. இரட்டை சகோதரர்கள் என்பதால், ஒரே மாதிரியாக இருப்பார்கள்.. ஒரே மாதிரியான டிரஸ்களையே அணிவார்கள்.. 2 பேரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், யார் அண்ணன்? யார் தம்பி என்ற குழப்பம் எல்லாருக்குமே வந்துவிடும்.. இதே குழப்பம்தான், கல்யாணப் பெண்ணுக்கும் வந்துள்ளது.. ஒரே வீட்டில் இருந்துகொண்டு அடையாளம் கண்டுபிடிப்பதில் ரொம்பவே திணறி உள்ளார்.
உடலுறவு
இவர்களுக்குள் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது என்ற குழப்பமும் அவருக்கு வந்தது.. இவரது இந்த குழப்பத்தை கண்ட, கொழுந்தனின் புத்தி தடுமாறியது.. அண்ணி என்றும் பாராமல் அவருடன் உறவு வைக்க விரும்பி உள்ளார்.. ஒருநாள் உறவுக்கு அழைக்கவும், கணவர் தான் அழைக்கிறார் என்று நினைத்துவிட்டார்.. உறவும் வைத்து கொண்டுள்ளார்.. இப்படியே நாட்கள் போனது.. அதுவும் 6 மாதங்கள் போய்விட்டது.. 6 மாதம் கழித்துதான், இத்தனை நாளும் உறவு வைத்திருந்தது தெரியவந்தது நினைத்து அதிர்ச்சி அடைந்தார் அந்த பெண்..
கூல் பதில்
நிலைகுலைந்து போன நிலையில், நடந்த விவரத்தை கணவரிடம் சொல்லி சொல்லி அழுதுள்ளார்.. ஆனால், அவரோ படுகேஷூவலாக இதை எடுத்து கொண்டார்.. "என் தம்பிதானே.. அவனும் நானும் எப்பவுமே ஒன்றுதான்.. ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம்.. இதில் என்ன தவறு இருக்கிறது? அவன் மீது தவறில்லை.. அவனை சந்தோஷப்படுத்துவது உன் வேலை" என்று கூலாக சொல்லி உள்ளார்.. இதை கேட்டு அதற்கு மேல் அந்த பெண் அரண்டு போய்விட்டார்.
வாலி படம்
உடனடியாக அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லவும், அவர்கள் சிவாஜி நகர் போலீசில் புகார் தந்துள்ளனர்.. இந்த புகாரை பார்த்து போலீசாரும் மிரண்டு விட்டனராம்.. பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, 378, 323, 506, மற்றும் 24 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்... அப்படியே "வாலி" படம் பார்ப்பது போலவே இருக்கிறது இல்லையா இந்த சம்பவம்..!?