நவ. 24-ல் அயோத்திக்கு செல்கிறேன்... டெல்லியில் அத்வானியிடம் ஆசி வாங்குவேன்... உத்தவ் தாக்கரே
மும்பை: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. மேலும் வரும் 24-ந் தேதி அயோத்திக்கு தாம் செல்ல இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பு குறித்து மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பு இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதப்படும். அனைவரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
அயோத்திக்கு வரும் 24- ந் தேதி செல்கிறேன். அதன் பின்னர் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்து நன்றி தெரிவிக்கிறேன்.
ஏனெனில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரையை நடத்தியவர் அத்வானி. அவரிடம் நான் ஆசி வாங்க இருக்கிறேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications