வாய்க்கு வந்தபடி மிகவும் டூ மச்சாக பேசுகிறார் சஞ்சய் ராவத்.. பாஜக கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: வாய்க்கு வந்தபடி மிகவும் அதிகமாக பேசுகிறார் சஞ்சய் ராவத் என பாஜகவின் மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இன்று காலை அஜித் பவாரின் ஆதரவுடன் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றார். துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவாரும் பதவியேற்றார்.

    Verbal diarrhoea right phrase to use for him: BJP on Sanjay Raut

    மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு என நிலைப்பாட்டை என்சிபி எடுக்கவில்லை. அது முற்றிலும் அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என சரத்பவார் கூறியுள்ளார். இந்த நிலையில் என்சிபியில் பாஜக பிளவை ஏற்படுத்திவிட்டதாக சிவசேனா குற்றம்சாட்டியது.

    அப்போது மும்பை பாஜக மாநில தலைவர் கிரிஷ் மகாஜன் கூறுகையில் 170 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபிப்போம். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் கொடுத்துள்ளார். அவர்தான் என்சிபி எம்எல்ஏக்களின் சட்டசபை குழுத் தலைவர். அப்படியென்றால் அனைத்து என்சிபி எம்எல்ஏக்களும் எங்களை ஆதரிக்கின்றனர் என்றே அர்த்தம்.

    இது தெரியாமல் சிவசேனாவின் சஞ்சய் ராவத் அதிகமாகவே பேசி வருகிறார். வாய்க்கு வந்தபடி டூ மச்சாக பேசுகிறார் என்பதே அவருக்கு பொருத்தமான சொல்லாகும். சிவசேனா எம்எல்ஏக்களும் எங்களுடன் வந்து ஆதரவு தருவர் என்றார் மகாஜன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+