Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன் நடந்தது என்ன? சக போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ரயிவே பாதுகாப்பு படை வீரர் உயர் அதிகாரி மற்றும் 3 பயணிகளை சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் உயர் அதிகாரி, 3 பயணிகளை சுட்டு கொலை செய்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பாக என்ன நடைபெற்றது என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

 What happened before the shooting on the moving train? Shocking information released by police

ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை 2.53 மணிக்கு வந்துள்ளது. அப்போது, அதன் பாதுகாப்பு பணியில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சேத்தன் சிங், நரேந்திர பார்மர், அமே ஆச்சர்யா ஆகியோர் ஏறியுள்ளனர். இவர்கள் அதற்கு முந்தைய நாள் தாதர் - போர்பந்தர் ரெயிலில் சூரத் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்து இருக்கிறார்கள்.

ரயில் குஜராத் மாநிலம் வல்சாட் வந்த போது, சேத்தன் சிங் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவிடம் கேட்டுள்ளார். உடனே சக பாதுகாப்பு படை வீரர்கள் சேத்தன் சிங்கை ஓய்வு எடுங்கள் என்று கூறியுள்ளனர். மேலும் அவரது ஏ.ஆர்.-எம்.1 ரக நவீன துப்பாக்கியையும் வாங்கியுள்ளனர். சக காவலர்கள் சொன்னதை கேட்காமல் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு உதவி சப்-இன்ஸ்பெக்ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனால், மாற்று வீரரை பணிக்கு அனுப்ப வலியுறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே தனக்கு உடல்நிலை சரியாகவிட்டது, தொடர்ந்து பணி செய்ய விரும்புகிறேன் என சேத்தன் சிங் கூறியுள்ளார். இதனால், அவரை பணி செய்ய அனுமதித்து இருக்கிறார்கள். மேலும் தனது துப்பாக்கியை பாதுகாப்பு படை வீரர்களிடம் இருந்து அடம் பிடித்து வாங்கியிருக்கிறார்.

இதைதொடா்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் ரோந்து பணிக்கு சென்று விட்டனர். ரயிலானது பால்கர், வைத்தர்னா ரயில் நிலையம் அருகே வந்த போது, சேத்தன் சிங் 20 தோட்டாக்கள் உள்ள தனது துப்பாக்கியை எடுத்து உயர் அதிகாரி திகாராம் மீனாவை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனிடையே, சேதன் சிங் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்கான சிகிச்சையை பெற்று வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+