Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெனிசுலா போல் மோடியையும் கடத்துவாரா டொனால்ட் டிரம்ப்? காங்கிரஸ் மாஜி முதல்வரின் விபரீத ஆசை.. சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

மும்பை: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடத்தியதுபோல் பிரதமர் மோடியையும் கடத்தி செல்வாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவராக பிருத்விராஜ் சவான். இவர் மத்திய அமைச்சராக பணியாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதல்வராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

will-donald-trump-kidnap-our-pm-modi-like-venezuela-congress-leader-prithviraj-chavan-raises-questi

இந்நிலையில் தான் பிரதமர் மோடியை டிரம்ப் கடத்துவாரா? என்று பிருத்விராஜ் சவான் கேள்வி கேட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது படையை அந்த நாட்டுக்கு அனுப்பி கைது செய்தார்.

இந்நிலையில் தான் பிருத்விராஜ் சவான் வெனிசுலாவில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, ‛‛வெனிசுலாவில் நடந்ததைப்போல் இந்தியாவில் நடக்குமா? டிரம்ப் எங்கள் பிரதமரை கடத்துவாரா?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அமெரிக்கா - வெனிசுலா அண்டை நாடுகளாகும். இருநாடுகளை கரிபீயன் கடல் பிரிக்கிறது. வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்கும் சட்டவிரோதமாக வெனிசுலாவை சேர்ந்தவர்கள் நுழைவதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். கடந்த சில வாரங்களாக மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இந்நிலையில் தான் திடீரென்று டொனால்ட் டிரம்ப் உத்தரவின் அடிப்படையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கிளியா ஃபுளோரஸ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் தான் வெனிசுலாவை போல் இந்தியாவிலும் பிரதமர் மோடியை டிரம்ப் கைது செய்வாரா? என்று கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இந்த கருத்துக்கு பாஜகவினர் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் டிஜிபி எஸ்பி வைத் கூறுகையில்,‛‛பிருத்வி சவானின் இந்த கருத்து அவமானமிக்கது. டிரம்ப், வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு செய்தது போல் பிரதமர் மோடிக்கும் நடக்கும் என்று நினைப்பது நாட்டுக்கே அவமானம். பேசுவதற்கு முன் யோசியுங்கள், பிருத்விராஜ் சவான். அல்லது இதுதான் காங்கிரஸின் உண்மையான கொள்கையா?'' என்று சாடினார்.

மேலும் ‛‛இந்தியா அணுஆயுத பலம் கொண்டது. இந்த வேளையில் இப்படி பிருத்வி ராஜன் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது'' என்று சாடி உள்ளனர். மேலும், பலரும் பிருத்வி சவானை, முட்டாள் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா - இந்தியா இடையே நிலவும் பிரச்சனை பற்றி பிருத்விராஜ் சவான் கூறும்போது, ‛‛50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வது சாத்தியமில்லை.இது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்காவுக்கு செல்லும் ஏற்றுமதியை தடுக்கும் முயற்சியாகும்.

நேரடியாகத் தடை விதிக்க முடியாததால், வரிகளை ஓர் தடையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்தியாவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும். அமெரிக்காவுடனான ஏற்றுமதியால் கிடைத்த லாபம் இனி இருக்காது. மாற்றுச் சந்தைகளை தேட வேண்டும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+