அயோத்தி ராமர் சிலைக்கு கல் எடுத்த கிராமத்திற்கு சென்ற பாஜக எம்.பி.. மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு
மைசூர்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பால ரமர் சிலைக்கு கற்கள் எடுக்கப்பட்ட கிராமத்திற்கு சென்ற பாஜக எம்.பியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றார்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3 அடுக்குகளாக இந்த ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது முதல் தளத்தின் பணிகள் முழுவதுமாக நடந்து முடிந்துள்ளது. கோயிலின் முதல் தளத்தில் பாலராமருக்கு சிலை வைக்கப்படுள்ளது. இன்று ராமர் கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிராண பிரதிஷ்டை சடங்குகள் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று இந்த சடங்குகளை செய்து வைத்தார். கோயில் கருவறையில் கடந்த 18 ஆம் தேதி நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை மேற்கொண்டார்.
பாஜக எம்பியை முற்றுகையிட்டனர்: இதையடுத்து பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரபலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளதால் அயோத்தி மட்டும் இன்றி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உற்சாகம் கரைபுரண்டது.
அயோத்தி கோயிலில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலைக்கு தேவையான கற்கள் மைசூர் அருகே உள்ள குஜ்ஜேகவுடனபுரா கிராமத்திலிருந்து எடுக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற இருந்த நிலையில், மைசூரு-குடகு தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா குஜ்ஜேகவுடனபுரா கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டார். இதன்படி கிராமத்திற்கு அவர் செல்ல முயன்ற போது கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாஜக எம்.பியை முற்றுகையிட்டனர்.
இழிவாக பேசினார்: எங்களை இத்தனை ஆண்டுகளாக புறக்கணித்ததாகவும் கிராமத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் கிராமத்தை சேர்ந்த தலித் மக்கள் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்திற்குள் நுழைய விடாமல் பாஜக எம்.பியை மக்கள் விரட்டியடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிரதாப் சிம்ஹா, கடந்த 2014 அம் ஆண்டு முதல் மைசூரு - குடகு தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவர் தலித்துகள் குறித்து இழிவாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுப்பபடுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications