நாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, வானகிரி கிராமத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு காளியம்மன் கோயிலும் உள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமை அங்கு வந்த குழந்தைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் பூம்புகார் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவிக்குப் பிறகு, சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குழந்தைகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதுபோல் 70 குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து ஐஸ்கிரீம் மாதிரியை பெற்று சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications