பள்ளி அறைக்குள் .. கோரை பாயை விரித்து, குடித்து, கும்மாளம்.. சமூக விரோதிகள் அட்டகாசம்
பள்ளி வகுப்பறையில் நடுராத்திரி நுழைந்து குடித்து கும்மாளம் போட்டுள்ளனர் மர்மநபர்கள்.
நாகை: பள்ளி அறைக்குள் நுழைந்து.. கோரை பாயை விரித்து.. குடித்து கும்மாளம் போட்டு சென்றிருக்கிறார்கள் மர்மநபர்கள்!!
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வடக்குவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை சாயங்காலம் பள்ளியை வழக்கம்போல் தலைமை ஆசிரியை ஜெயந்தி பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
சனி, ஞாயிறு லீவு முடிந்து திங்கட்கிழமை வந்து கதவை திறக்க வந்திருக்கிறார். அப்போது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பூட்டுகள் உடைப்பு
உடனே உள்ளே சென்று பார்த்தால், மர்ம நபர்கள் நள்ளிரவில் ஸ்கூலுக்கு உள்ளேயே வந்து போயிருக்கிறார்கள் என தெரியவந்தது. ஒவ்வொரு கிளாஸ் ரூமூக்கு வெளியே பூட்டப்பட்டிருந்த பூட்டுக்களை உடைத்தெறிந்துள்ளனர். அங்கிருந்த டீச்சர்களின் சேர், டேபிள்களையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.

மதுபாட்டில்கள்
பிள்ளைகள் உட்கார வைத்திருந்த கோரை பாயை எடுத்து விரித்து வைத்து அதில் உட்கார்ந்து தண்ணி அடித்திருக்கிறார்கள். குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களை வீசி விட்டு சென்றிருக்கிறார்கள்.

பீரோ உடைப்பு
போனவர்கள் சும்மா போகவில்லை, தலைமை ஆசிரியை ரூமில் இருந்த பீரோவில் மாணவர்களின் மாற்று சான்றிதழ் உள்பட முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டும் சென்றுள்ளனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் போரில் கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் குமுறல்
இந்த ஸ்கூலுக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் உள்ளதாம். அதனை அகற்ற வேண்டும் என்று நிறைய முறை பொதுமக்கள் புகார் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

விசாரணை தீவிரம்
கிளாஸ் ரூமையே பாராக மாற்றிவிட்டு சென்ற அந்த சமூகவிரோதிகள் யார் என தெரியவில்லை. எதற்காக முக்கியமான ஆவணங்களை எடுத்து அழித்துவிட்டு போனார்கள் என்றும் புரியவில்லை என்பதால் போலீசார் மும்முரமான விசாரணையில் இறங்கி உள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications