விவசாயிகள் விரக்தி... நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி மறியல்
நாகை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், விவசாயி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கிராம பகுதிகளில் உடனடியாக திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் கோரிக்கை
இந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் திருமருகல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தியும் விவசாயிகள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்லை கும்பகோணம் நாகை சாலையில் நெல்மணிகளை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் முன்னிலையில் விவசாயிகள் மண்ணெண்னை கேனை எடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

அதிகாரிகள் உறுதி
மண்ணெண்ணை கேனை கைபற்றிய போலீசார் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல் கொள்முதல் நிலையம் திறப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

விவசாயிகள் வேதனை
தை திருநாள் நெருங்கிய நிலையில், கொண்டாட வேண்டிய விவசாயிகள், விரக்தியில் பாடுபட்டு விளைவித்த நெல்லை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications