Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. பள்ளி கல்லூரிகளுக்கு லீவ்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை 6.30 தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆட்சியர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதையொட்டி, நாகை, கீள்வேளூர் வட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலாயம், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலாயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பேராலாயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆட்சியர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்

nagapattinam velankanni holiday

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து கடலில் நீராடிவிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் பேராலய நிர்வாகம் செய்துள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுள்ளன. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக திருக்கொடி ஊர்வலமும், தேர்பவனியும் நடைபெறும். இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். பெருவிழாவின் போது வாண வேடிக்கைகள் கோலாகலமாக நடைபெறும்.

இந்த விழாவிற்காக மின்விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்டு அந்த சுற்றுப்பகுதி முழுவதும் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவிற்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய விடுமுறை நாளில் முக்கிய அத்தியாவசிய துறைகள் அனைத்தும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. செப் 8 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய பவனி செப் -7 ம் தேதி மாலை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+