தோப்புத்துறை பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை... சுஜித்தை மீட்க மனம் உருகி து ஆ
நாகை: மணப்பாறையை அடுத்து நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித்தை பாதுகாப்பாக விரைந்து மீட்க வேண்டும் என, நாகை மாவட்டம் தோப்புத்துறை பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
சிறுவன் சுஜித் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத மாச்சரியங்களை கடந்து சிறுவன் சுஜித்துக்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை என்ற ஒற்றை வார்த்தை மூலம் கரம் கோர்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

உயிரைக் காப்பாற்ற
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு ஆகச் சிறந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிகின்றன.

கண்ணீர் மல்க
தொலைக்காட்சிகளில் மீட்பு பணிகளை பதைபதைப்புடன் பார்க்கும் தாய்மார்களும், முதியோர்களும் கண்ணீர் மல்க இறைவனை வேண்டி, அந்தச் சிறுவன் சுஜித்தை எப்படியாவது மீட்டுவிட மாட்டார்களா என துடிதுடிக்கின்றனர்.

மனம் உருகி து ஆ
சிறுவன் சுஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என நாகை மாவட்டம் தோப்புத்துறையில் இன்று மாலை (அசர்) தொழுகைக்கு பிறகு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுஜித்துக்காக மனம் உருகி பிரார்த்தித்தனர்.

இறைவா காப்பாற்று
அந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கண்ணீர்மல்க இறைவனிடம் வேண்டினர். மேலும், உலகமக்களின் பிரார்த்தனையை ஏற்று சுஜித்தை காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு குழந்தைகள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications