Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை

போலீஸ்காரர் மீது பஸ் மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்த மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை

    நாகை: அப்பதான் போலீஸ்கார கணவனை வேலைக்கு வழியனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் பஸ்ஸின் சக்கரம் இப்படி மொத்தமாக கணவனின் உடம்பில் ஏறி இறங்கும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் காட்வின் டோனி. இவருக்கு 28 வயதாகிறது. நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

    வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு பைக்கில்தான் தினமும் செல்வார். 5 மாசத்துக்கு முன்னாடிதான் இவருக்கு திருமணம் ஆனது. மனைவி பெயர் ஆஷா.

    களியக்காவிளை

    களியக்காவிளை

    இந்நிலையில், இன்று காலை காட்வின் டோனி, வழக்கம்போல வேலைக்கு பைக் எடுத்து கொண்டு கிளம்பினார். தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி-கொல்லவிளை இடையே அவர் வந்த கொண்டிருந்தபோது, திடீரென ஒரு அரசு பஸ் வேகமாக வந்தது. அது திருச்செந்தூரில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற பஸ் ஆகும்.

    பஸ் சக்கரம்

    பஸ் சக்கரம்

    வேகமாக வந்த பஸ், எதிர்பாராத விதமாக காட்வின் டோனி பைக் மீது மோதியது. இதில் டோனி நிலை தடுமாறி பஸ்சுக்கு அடியில் விழுந்துவிட்டார். அடுத்த செகண்டே பஸ்ஸின் பின் சக்கரம் டோனி மீது ஏறி இறங்கியதில், அங்கேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் டோனி.

    டிராபிக் ஜாம்

    டிராபிக் ஜாம்

    பரபரப்பு நிறைந்த சாலையில் காலையிலேயே இப்படி ஒரு விபத்து நடந்துவிடவும், பொதுமக்கள் கூடிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே டிராபிக் ஜாம் ஆகிவிட, உடனடியாக விபத்து குறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    கணவன்

    கணவன்

    கூலம் கூலமாக நசுங்கி கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவிக்கு தகவல் சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் கணவனை வழியனுப்பி வைத்த மனைவி, இதைக் கேட்டதும் அங்கேயே கதறி துடித்தார். பின்னர், உறவினர்களுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தார். கணவனின் சடலத்தை கண்டு மனைவி அழுத காட்சி அனைவரையுமே உலுக்கி விட்டது.

    கைது

    கைது

    இறுதியில், மனைவி ஆஷா தக்கலை போலீசில் புகார் செய்யவும், அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கருணாகரனை கைது செய்தனர். தகவலறிந்து மாவட்ட எஸ்பியும் நேரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். உடனடியாக ஆஸ்பத்திரி சென்று துடிதுடித்து அழுதுகொண்டிருந்த ஆஷாவுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார். கல்யாணமாகி 5 மாசமே ஆன நிலையில், இப்படி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தக்கலை மக்களின் மனசில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+