யார் அந்த "விஐபி"?.. ஆற்றில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த காமுகன்.. மொத்தம் 16 பேர்.. மிரண்ட நாகை
பெண்கள் குளிக்கும்போது வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
நாகை: பெண்கள் ஆற்றில் குளிக்கும்போது வீடியோ எடுத்த காமுகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் முப்பத்தி கோட்டத்தை சேர்ந்தவர் பாரதிராஜா.. 26 வயதாகிறது.. எம்ஏ பட்டதாரி.. அந்த கிராமத்தில் ஒரு ஆறு ஓடிக் கொண்டே இருக்கும்.. அந்த ஆற்றங்கரையோரம்தான் பாரதிராஜாவின் வீடு உள்ளது.
கிராமத்தை சேர்ந்த பெண்கள் முதல் சிறுமிகள் வரை அந்த ஆற்றில்தான் குளிப்பது வழக்கம்.. அப்படி குளிக்க வரும்போது, அவர்களை மறைவாக இருந்து தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார் பாரதிராஜா..

மிரட்டல்
மேலும் அந்த வீடியோக்களை வைத்து, சம்பந்தப்பட்ட பெண்களிடம் காண்பித்து மிரட்டி பாலியல் டார்ச்சரும் தந்துள்ளார்.. இறுதியில் பணம், நகைகளையும் மிரட்டி பறித்துவிடுவார். இது பல நாட்களாகவே நடந்து வந்துள்ளது. இப்படித்தான், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், கல்லூரி மாணவியையும் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.. பணத்தையும் அவ்வப்போது மிரட்டி பெற்று வந்துள்ளார்.. ஆனால், பாரதிராஜா பணம் கேட்பதை நிறுத்தவே இல்லை..

மன உளைச்சல்
திடீர் திடீரென பணம் கேட்டுவிடுவதால், கல்லூரியில் படிக்கும் அந்த பெண் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.. தன்னிடம் பணம் இல்லை என்று ஒருகட்டத்தில் பாரதிராஜாவிடம் நேரடியாக சொல்ல ஆரம்பித்தார்.. இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிராஜா, அவரது ஆபாச படத்தை, கடந்த 9ம் தேதி வாட்ஸ்அப்பில் பரவ விட்டார்... இதை அந்த மாணவியின் குடும்பத்தினர் கண்டு அதிர்ந்துவிட்டனர்..

புகார்
மாணவியின் சகோதரர்கள் திரண்டு சென்று பாரதிராஜாவிடம் இதை பற்றி கேட்டுள்ளனர்.. இது தகராறாக உருவெடுத்துள்ளது.. இறுதியில் திருக்குவளை போலீசுக்கு சென்று மாணவி குடும்பத்தினர் புகார் தந்தனர்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் பாரதிராஜாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.. ஆனால், அவர் மீது கேஸ் எதுவும் பதிவு செய்யவில்லை என்று கொந்தளிக்கிறார்கள் கிராம மக்கள்.

சிறுமிகள்
அதுமட்டுமல்ல, போலீஸில் புகார் என்றதுமே பாரதிராஜா அந்த கிராமத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றாராம்.. ஆனால் மேலப்பிடாகை பகுதியில் கிராம மக்களே அவரை மடக்கி பிடித்துள்ளனர்.. பாரதிராஜாவிடமிருந்து செல்போனையும் வாங்கி சோதனையிட்டுள்ளனர்.. அப்போதுதான் அதில் இருந்த வீடியோக்களை பார்த்து மிரண்டு விட்டனராம்.. கிராமத்தைச் சேர்ந்த கல்யாணமான பெண்கள், சிறுமிகள் என 16-க்கும் மேற்பட்டோரின் வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது..

செல்போன்
அந்த கிராமத்தை தவிர, வேறு சில பெண்களின் வீடியோக்களும் இருந்திருக்கிறது. இதை பற்றி கேட்டதற்கு, பணத்திற்காக இவ்வாறு செய்ததாக கிராம மக்களிடமே பாரதிராஜா ஒப்புக் கொண்டாராம்.. அந்த ஆத்திரத்தில்தான் செல்போனை தரையில் அடித்து நொறுக்கி, வாய்க்காலில் தூக்கி போட்டுவிட்டார்களாம் கிராம மக்கள்.. இவ்வளவையும் தாங்கள் போலீசில் சொல்லியும், வழக்கு ஏன் பதியவில்லை என்று தெரியவில்லை என்கிறார்கள்.

துன்புறுத்தல்
அதே கிராமத்தை சேர்ந்த சில கல்லூரி பெண்களிடம் நட்பாய் பழகி, காலேஜில் கொண்டு போய் விடுவதாக சொல்லி காரில் ஏற்றி செல்வாராம்.. பிறகு கூல்டிரிங்ஸ் சாப்பிட்டு போகலாம் என்று சொல்லி, தான் தங்கும் லாட்ஜுக்கு அழைத்து வந்து, மயக்க மருந்து கலந்து தந்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளாராம்.. இப்படி நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப மானத்துக்கு பயந்து வெளியில் சொல்லாமல் இருந்து வருகிறார்களாம்.

யார் அந்த புள்ளி
இப்படி பாரதிராஜா மீது ஆங்காங்கே புகார்கள் கிளம்பி உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான், உண்மை தன்மை தெரியவரும் என்கிறார்கள்.. இவரிடம் பல பெண்கள் சிக்கி இருக்கலாம் என்றும், இவருக்கு பின்னணியில் யாராவது விஐபிக்களின் தொடர்புகள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் கொந்தளித்து கூறுகிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications