சூறைக்காற்று..பறந்து சென்ற வலைகள்..நாகை மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இலங்கை கடற்படை 4 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வரும் இலங்கை கடற்படை மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாகையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது சூறைக்காற்று வீசியது.
சூறைக்காற்றால் நாகை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் வல்வெட்டித்துறை கடற்பகுதிக்கு சென்றது. வலைகளை எடுப்பதற்காக மீனவர்கள் வல்வெட்டித்துறை கடற்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டியதாக கூறி நான்கு மீனவர்களை சிறைபிடித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் நாகையில் இருந்து 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல்பகுதியில் நுழைந்ததாக கூறி 11 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது.

இந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீனவர்கள் 11 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதங்களில் தமிழக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டபோது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications