தொடரும் அட்டூழியம்.. நாகை மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகை பறிமுதல் செய்தனர். அதோடு கைதான மீனவர்களை விசாரணைக்காக காங்கசேன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இலங்கை கடற்படையால் தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் மீனவர்களை துன்புறுத்துவதோடு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது.
மேலும் சில சமயங்களில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்குவதும், அவர்களின் வலைகளை பறித்து அனுப்புவது, மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்துகின்றனர். மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார்.
ஆனாலும் கூட மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை மட்டும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் தான் தற்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீனவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications