பாஜகவினரின் அட்டூழியம்.. முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு ஒப்பந்ததாரருக்கு மிரட்டல் - 2 பேர் கைது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள துளசியாப்பட்டினத்தில் ஒளவையார் மணிமண்டபம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரரிடம் முருகன் மாநாட்டுக்குப் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ளது துளசியாப்பட்டினம். இங்கு தமிழக அரசு சார்பில் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் தமிழ்ப் புலவர் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன கட்டுமானப் பணிகளுக்காக வளாகத்துக்குள் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்தப் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதாக பாஜகவினர் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரோடு மட்டுமல்லாமல், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, வேதாரண்டயம் வட்டாட்சியர் வடிவழகன் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளம், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணினுடைய அளவை நில அளவையரைக் கொண்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒப்பந்ததராரிமும் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். கட்டுமானப் பணிக்கான திட்ட அறிக்கையின்படி வளாகத்தில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதில் இருந்து எடுக்கப்பட்ட மண் அருகிலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. பணி முடிந்த பின்னர் தூர்வைக்காக அந்த மண் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஒப்பந்தரரார் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் முன்பே முருகன் மாநாட்டுக்கு 5 லட்சம் ரூபாய் கேட்டு பாஜகவினர் மிரட்டினர். அந்தப் பணத்தை கொடுக்காததால் பள்ளம் தோண்டிய மண்ணை வைத்து கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதாக பொ் புகார் அளிக்கின்றனர் என்று ஒப்பந்ததரார் கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக வாய்மேடு காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாஜக நிர்வாகிகளான கரு நாகராஜன், இளங்கோவன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications