பாஜகவினரின் அட்டூழியம்.. முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு ஒப்பந்ததாரருக்கு மிரட்டல் - 2 பேர் கைது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள துளசியாப்பட்டினத்தில் ஒளவையார் மணிமண்டபம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரரிடம் முருகன் மாநாட்டுக்குப் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ளது துளசியாப்பட்டினம். இங்கு தமிழக அரசு சார்பில் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் தமிழ்ப் புலவர் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன கட்டுமானப் பணிகளுக்காக வளாகத்துக்குள் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்தப் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதாக பாஜகவினர் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரோடு மட்டுமல்லாமல், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, வேதாரண்டயம் வட்டாட்சியர் வடிவழகன் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளம், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணினுடைய அளவை நில அளவையரைக் கொண்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒப்பந்ததராரிமும் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். கட்டுமானப் பணிக்கான திட்ட அறிக்கையின்படி வளாகத்தில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதில் இருந்து எடுக்கப்பட்ட மண் அருகிலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. பணி முடிந்த பின்னர் தூர்வைக்காக அந்த மண் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஒப்பந்தரரார் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் முன்பே முருகன் மாநாட்டுக்கு 5 லட்சம் ரூபாய் கேட்டு பாஜகவினர் மிரட்டினர். அந்தப் பணத்தை கொடுக்காததால் பள்ளம் தோண்டிய மண்ணை வைத்து கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதாக பொ் புகார் அளிக்கின்றனர் என்று ஒப்பந்ததரார் கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக வாய்மேடு காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாஜக நிர்வாகிகளான கரு நாகராஜன், இளங்கோவன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications