வேளாங்கண்ணியில் சிக்கிய பல கோடி மதிப்புள்ள பொருள்.. கடலில் மட்டுமே கிடைக்கும் மிதக்கும் தங்கம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கில உமிழ்நீர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வன அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். சுமார் ரூ.9 கோடி மதிப்புள்ள திமிங்கில உமிழ்நீரை பதுக்கி வைத்திருந்த 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடல் தங்கம் என்றும் மிதக்கும் தங்கம் என்றும் அழைக்கப்படும் பொருள் என்றால், திமிங்கில உமிழ்நீர் கட்டி தான். இதன் மதிப்பு பல கோடியாகும். கடல் பகுதிகளில் வாழும் எண்ணெய்த் திமிங்கிலங்கள் வெளியேற்றும் இந்த உமிழ்நீர் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம்.

இந்த திமிங்கில உமிழ்நீர் கட்டி என்பது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். இந்த எண்ணெய்த் திமிங்கிலங்கள் கடலில் வாழும் பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம் ஆகும். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க இயலாது.
அதனால் அந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக் கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிவிடும். இதுதான் திமிங்கல வாந்தி என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் அம்பர் கிரீஸ் என்று அழைக்கப்படுகிறது.
திமிங்கிலத்தின் வாந்தியான திமிங்கில உமிழ்நீர் கட்டி உலகம் முழுவதும் நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கில வாந்தி எனும் அம்பர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு ஏற்றார் போல் அதிக விலை தரப்படுகிறது. கோடிகளில் இதன் மதிப்பு உள்ளது.
சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்கவும், அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்கவும் பயன்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கில வாந்தியிலிருந்து தயாரிக்கப்படும் ஹப்பே நிஷாத் எனும் மருந்து விந்தணுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் திமிங்கில வாந்தியான அம்பெர்கிரிஸ் கிடைப்பது மிகவும் அபூர்வமாகும் வளைகுடா நாடுகளில் திமிங்கில வாந்தி எனும் அம்பகிரிசுக்கு பெரும் தேவை இருப்பதால் அதனை கோடிகளை கொட்டி வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். இதனால் தான் இதனை 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கிறார்கள்.. பன்னாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு தரத்தினை பொறுத்து 1.5 கோடி ரூபாய் வரை போகிறது. இதன் காரணமாக எண்ணெய்த் திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுகிறது. திமிங்கலத்தை கொல்வதன் மூலமாக அதன் உமிழ்நீர் சேகரிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதன் உமிழ் நீர் கடலில் மிதக்கிறது/ இந்தியாவில் திமிங்கில வாந்தியை கடத்தி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். திமிங்கில வாந்தியை சட்டவிரோதமாக விற்றால் கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் கன்னியாகுமரி, திருப்பூரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் திமிங்கில உமிழ்நீர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வன அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நேற்று வன அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் விற்பனைக்காக திமிங்கில உமிழ்நீர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து திமிங்கில உமிழ்நீரை வன அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக நாகை நம்பியார் நகரை சேர்ந்த வீரமணி(வயது 43), கார்த்திகேயன்(37), புதுச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ்(50), தஞ்சையை சேர்ந்த தமிழரசன்(42) முத்துப்பேட்டையை சேர்ந்த கண்ணன்(59) ஆகிய 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 9 கிலோ எடை உள்ள திமிங்கல உமிழ் நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.பறிமுதல் செய்யப்பட்டுள்ள திமிங்கில உமிழ்நீர் தரமானதா? என்பதை அறிய ஆய்வுக்கு அனுப்பி உள்ளார்கள்.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications