8 கிலோ தங்க அங்கி கொள்ளை.. பதற வைத்த 24 பேர்.. அனைவரும் குற்றவாளிகள்.. கோர்ட் அதிரடி!
Recommended Video
நாகர்கோவில்: தமிழகத்தின் 108 வைணவ தேசங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 1974 முதல் பத்து ஆண்டுகளாக மூலவர் பெருமாள் சிலை மேல் சாத்தப்பட்ட சுமார் எட்டு கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் 24 பேர் பெரும் குற்றவாளிகள் என நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில். இது சுமார் 1700 ஆண்டு பழமை வாய்ந்ததாகும்.

இந்த கோவிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் காணப்படுவார். சிலை முழுவதும் சுமார் 12 கிலோ தங்க தகடுகள் போர்த்தப்பட்டிருந்தது. திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 1974 முதல் 1984 மேலும் ஆண்டில் பெருமாள் சிலை மேல் சாத்தப்பட்ட சுமார் எட்டு கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்டது.
தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியாமல் இருக்க இரும்பு தகடுகள் வெட்டி பொருத்தப்பட்டு அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. இது தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 17-06-1992 ம் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். 27 ஆண்டுகளாக நடந்த வழக்கில் 151 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 286 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் ஒரு பெண் உட்பட 24 பேர் குற்றவாளிகள் என நாகர்கோவில் நீதி ம்னற்றதில் நீதிபதி கிறிஸ்டியான் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications