கந்துவட்டி.. கடன் பிரச்சினை.. ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்துத் தற்கொலை
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கந்து வட்டி மற்றும் கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 2௦ வயது இளம்பெண் உட்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நான்கு பேரின் உடல்களை கைப்பற்றிய வடசேரி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (52).
தொழிலதிபரான இவருக்கு சமீப காலமாக தொழிலில் பெரும் நஷ்டம் இருந்து வந்ததாகவும், தனது வீடு உட்பட சொத்துக்களை அடமானம் வைத்து அதிலிருந்து கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்த பிறகும் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கந்து வட்டிக் கொடுமை
இதனால் கந்து வட்டிக்கு சுப்பிரமணியம் பணம் பெற்றதாகவும், பணத்தை திருப்பி கொடுக்காததால் கந்துவட்டி கும்பல் சுப்ரமணியனின் குடும்பத்தை மிரட்டியதாகவும் கூறபடுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுப்பிரமணியன் நேற்றிரவு குளிர்பானத்தில் விஷம் கலந்து குடும்பத்துடன் அருந்தியுள்ளார்.
திறக்கப்படாத கதவு
பொதுவாக காலை ஆறு மணிக்கு சுப்ரமணியனின் வீட்டுக் கதவு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கபடாததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினார்கள். கதவினை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 பேரும் தற்கொலை
சம்பவ இடம் வந்த வடசேரி போலீசார் வீட்டினை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி ஹேமா, 48, மகள் ஷிவானி,20, மற்றும் சுப்ரமணியனின் தாய் ருக்குமணி,72 ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தனர்.
பெரும் சோகம்
உடலை கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரிடமும் சகஜமாக பழகும் சுப்ரமணியனின் குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.