டாஸ்மாக் பாரை திறக்கிறாங்க.. ஆனா ராமேஸ்வர தீர்த்த கிணறை திறக்க மறுக்குறாங்க.. பாஜக அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: டாஸ்மார் பாரை நாளை முதல் திறக்கிறார்கள். ஆனால் ராமேஸ்வர தீர்த்த கிணற்றை திறக்க மறுக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை விமர்சித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை வேண்டும். மத்திய அரசு 106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில் மாநில அரசு 5 ஏக்கர் இடம் ஒத்துக்காததால் மருத்துவமனை அமையவில்லை, மாநில அரசு உடனடியாக நிலம் ஒதுக்க வேண்டும்.

நாளை டாஸ்மாக் பார் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது, ஆனால் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறு திறக்க கூடாது என அரசு கூறுகிறது. தீர்த்த கிணறு நம்பி 600 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், பாரை திறக்க கங்கணம் கட்டி வேலை செய்யும் தமிழக அரசு ஏன் ராமேஸ்வரம் கோவில் தீர்த்த கிணறை திறக்க கூடாது என கூறுகிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அரசு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும், தடுப்பூசி முழுமையாக போடாத நிலையில் குழந்தைகள் பேருந்துகளில் செல்வது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் புதிய நடைமுறை

தமிழகத்தில் புதிய நடைமுறை

மாகாணங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஐ எல்லா மாநிலங்களும் கொண்டாடும் நிலையில் தமிழகத்தில் மட்டும் புதிதாக ஜூலை 18 தமிழ்நாடு நாள் என அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன, இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். கடந்த வருடம் கொடுக்கப்பட்ட 7.5 சதவிகித ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

இப்போது உள்ள மாநில அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது வேதனைக்குரிய செயல். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர் சேர்க்கையை தமிழக அரசு வேண்டாம் என கூறுகிறது, எய்ம்ஸ் ஐ வைத்து அரசியல் செய்யக்கூடாது, மத்திய அரசு கொடுத்தாலும் அதனை மாநில அரசு வேண்டாம் என கூறுவது ஏன்?

பட்டாசு வெடிப்பது

பட்டாசு வெடிப்பது

இந்தியாவில் 2000 வருடங்கள் பாரம்பரிய பண்டிகையில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய கூடாது, 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அனைவரும் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தலைவர்களை கைது செய்கிறது, பாஜக நிர்வாகிகள் மற்றும் பெண்களை திமுக நிர்வாகிகளை தரகுறைவாக பேசி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை, இது குறித்து திமுகவினரால் பாதிக்கப்பட்ட பாஜக பெண் நிர்வாகிகள் டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+