அண்ணன் வைகோ அவர்களே… மோடிக்கு கருப்புக்கொடி காட்டாதீங்க… பொன். ராதா கோரிக்கை
Recommended Video

நாகர்கோவில்:கன்னியாகுமரி வரும் மோடிக்கு, வைகோ கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:
மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வர உள்ளார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அன்றைய தினம் 11 மணியளவில் மோடியின் கூட்டம் நடைபெறுகிறது.

வைகோவுக்கு வேண்டுகோள்
தமிழகத்திற்கு நலத்திட்டங்களை வழங்க வரும் மோடிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், லோக்சபா தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாஜக கருத்து
பாஜக கூட்டணியை பி அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ஏ அணி என்றும் கமலஹாசன் கூறி வருகின்றார். சினிமாவில் தான் ஏ, யூ என்று சான்றிதழ் கொடுப்பார்கள்.

குடும்பங்களின் கூட்டணி
அவர் எந்த அர்த்தத்தில் கூறுகின்றாரா என்று தெரியவில்லை. தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி.

தேமுதிக கூட்டணி
எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வந்து இணையும். இது எங்களின் நம்பிக்கை என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications