குலசை தசரா விழா.. குமரியிலிருந்து கிளம்பிய பக்தர்கள்.. ஆப்பிள் கொடுத்து வழியனுப்பிய மக்கள்!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வேடமணிந்து விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை குலசேகர பட்டிணத்தில் நடைபெற இருக்கும் தசரா விழாவில் பங்கேற்க ஆப்பிள் துணிமணிகள் கொடுத்து பூஜைகள் செய்து வழியனுப்பும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
விரதம் இருந்து வந்தவர்கள் வேடத்திற்கு ஏற்ப ஆடி பாடியதை ஏராளமனோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வணங்கி வழியனுப்பினார்கள். நவராத்திரி விழாவில் முக்கிய அம்சங்களில் ஓன்று குலசேகர பட்டிணத்தில் நடைபெறு இருக்கும் தசரா விழா.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வீதி வீதியாக எடுத்து கொண்ட அவதாரங்களுக்கு ஏற்ப வேடமனித்து வீதி உலா வருவார்கள். அப்படி வேடமனித்து வந்த பக்தர்கள் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணத்தில் நடைபெறு இருக்கும் தசரா விழாவில் பங்கேற்க்க புறப்பட்டு கிளம்பினர்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேடமனித்து விரதம் இருந்த நூற்றுக்கும் பக்தர்களை வழியனுப்பும் விழா நேற்று நாகர்கோவிலில் ராமன்புதூரில் நடைபெற்றது. ஆப்பிள் துணிமணிகள் கொடுத்து பூஜைகள் செய்து வழியனுப்பும் விழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்தவர்கள் வேடத்திற்கு ஏற்ப ஆடி பாடியதை ஏராளமனோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வணங்கி வழியனுப்பினார்கள்.












Click it and Unblock the Notifications