நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிக்பாக்கெட் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் பிரபல ரவுடி அடித்துக் கொலை

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: பிக்பாக்கெட் அடித்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல ரவுடி மற்றொரு ரவுடியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்,

பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, அடிதடி வழிப்பறி, பிக்பாக்கட் போன்ற பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது,

லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்

மற்றொரு ரவுடி படுகாயம்

மற்றொரு ரவுடி படுகாயம்

வடசேரியில் அமைந்துள்ள இந்து அறநிலையதுறைக்கு சொந்தமான சித்ரா நூல் நிலைய வளாகத்தில் சிவகுமார் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்,

இவர் அருகில் படுகாயங்களுடன் மற்றொரு பிரபல ரவுடி ஜான் கிடந்தார், நூல்நிலையத்திற்கு வந்தவர்கள் முனங்கள் சப்தம் கேட்டு சென்று பார்த்த போது ஒருவர் பிணமாகவும் மற்றொருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதையும் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்,

 போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஜானை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உடலை மீட்ட போலீசார் உடல் கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பங்குபிரிப்பதில் தகராறு

பங்குபிரிப்பதில் தகராறு

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவகுமார் மற்றும் கொலையாளி ஜான் ஆகிய இரண்டு பேரும் இணைந்து அண்ணா பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அதன் மூலம் கிடைத்த பணத்தில் மது அருந்தி விட்டு மீதம் உள்ள பணத்தை பங்கு வைப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜான் சிவகுமாரை பாட்டில் கம்பு உள்ளிட்டவற்றால் தாக்கி கொலை செய்துள்ளார்,

ரவுடி சிவக்குமார்

ரவுடி சிவக்குமார்

சம்பவத்தின் போது சிவகுமார் திருப்பி தாக்கியதில் ஜான் படுகாயம் அடைந்த அங்கேயே மயங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது, இது குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட ரவுடி சிவகுமார் மீது கோட்டார், வடசேரி, நேசமனிநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

English summary
famous rowdy in nagercoil, killed by another rowdy over pickpacke money issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X