சாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பஸ்.. டிரைவருக்கு அடி உதை!
Recommended Video
நாகர்கோவில்: சாலையோரம் நின்றவர் மீது அரசு பேருந்து மோதியதை தொடர்ந்து பேருந்தில் ஏறி ஓட்டுநர் மீது 5 பேர்கள் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரசு பேருந்து ஓட்டுனர் ஆவார். இவர் இன்று குளச்சலில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்தை ஓட்டி வந்தார். நாகர்கோவில் அருகே புன்னைநகர் சந்திப்புக்கு . பேருந்து வந்த போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது சுரேஷ் ஓட்டி வந்த பேருந்து மோதியது.

இதில் அந்த நபர் கீழே விழுந்தார். உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் சிலர் பேருந்துக்குள் ஏறி டிரைவர் சுரேஷை தாக்கி உள்ளனர். உடனே பேருந்து ஓட்டுனர் சுரேஷ் அந்த பேருந்தை நிறுத்தி விட்டார். தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்து டிரைவர்கள் நடுவழியில் நிறுத்தி டிரைவர் சுரேஷை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தினர்.
இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரசு பேருந்து ஓட்டுனர் சுரேஷை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் அங்கிருந்து பேருந்தில் எடுத்துச் சென்றனர். இந்த திடீர் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடத்த இடத்தில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications