குமரியில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம்.. விஜயதரணி புகாருக்கு எச் வசந்தகுமார் பதில்
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் போட்டியிட கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக விஜயதரணி கூறிய புகாருக்கு எச் வசந்தகுமார் பதில் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட எச் வசந்தகுமார் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் இப்போதைக்கு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது குடிநீர் பிரச்சினையாகும்.
நாகர்கோவிலில் 10, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுகூட சில இடங்களில் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. அவசரகால தேவை என்பதால் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் தாகத்தை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு
பின்னர் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும். இதற்காக குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் வசந்த் அன்ட் கோ சார்பில் ஒரு பெட்டி வைக்கப்படும். அதில் படித்த இளைஞர்கள் தங்களது சுயகுறிப்புகளை போட்டால் அதை ஆய்வு செய்து பயிற்சி வழங்குவது, வேலைவாய்ப்பு வழங்குவது என ஏற்படுத்தி தரப்படும்.

வாய்ப்பு
குமரியில் தங்கும் விடுதிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள கழிவுகள் கடலில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒரு சீட் கூட கிடைக்காததால் மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என கருதுகிறேன்.

கட்சி கட்டுப்பாடு
வயது முதிர்ந்தவர்கள் கட்சி தலைமையை மிரட்டி சீட் வாங்கியதால் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கூறியுள்ளார். விஜயதரணி மீண்டும் நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் முடிவெடுக்கும். யாராக இருந்தாலும் கட்சி கட்டுப்பாடு வேண்டும்.

சீட் கொடுத்தது தலைமை
நான் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு யாரிடமும் அழுத்தம் கொடுத்ததில்லை. வெற்றி பெறாது என தெரிந்தும் 2014-இல் குமரியில் நான் போட்டியிட்டேன். அதிக வாக்குகளை பெற்றேன். அதனடிப்படையில் எனக்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுத்துள்ளது என எச் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications