Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் உரசி பார்க்கும் கன்னியாகுமரி! இந்த முறை யாருக்கு வெற்றி? தொகுதி நிலவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் திமுகவுடன் கைகோர்த்து 10 தொகுதிகளில் காங்கிரஸ் களம் இறங்குகிறது. இதில் கன்னியாகுமரி முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது.

தேசிய அரசியலை நேரடியாக பிரதிபலிக்கும் தொகுதிகளில் கன்னியாகுமரி முக்கியமானது. இங்கு பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் கடந்த சில ஆண்டுகளாக போட்டி நிலவி வருகிறது. 2009ம் ஆண்டு திமுக இங்கு வெற்றி பெற்றது. ஆனால், அதன் பின்னரான தேர்தல்களில் தேசிய கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Kanyakumari Lok Sabha Constituency Constituency Status Explains Who Will Win This Time


இந்த தொகுதியில் நடந்த தேர்தல்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று 1952 தொடங்கி 2004 வரை நடைபெற்ற தேர்தல்கள். இரண்டாவது 2009 தொடங்கி 2021 வரை நடைபெற்ற தேர்தல்கள். அதாவது, 1952-2004 வரை நடைபெற்ற 15 லோக்சபா தேர்தல்கள் நாகர்கோவில் தொகுதி என்கிற பெயரில் நடைபெற்றிருக்கிறது. இதில் 8 தேர்தல்களில் காங்கிரஸ்தான் வென்றிருக்கிறது. மூன்று தேர்தல்களில் பாஜகவும், ஒரேயொருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றிருக்கிறது.

அதன் பின்னர் 2009-2021 வரை கன்னியாகுமரி தொகுதி என பெயரில் லோக்சபா தேர்தல் நடந்திருக்கின்றன. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் பெற்று பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் 2.4 லட்சம் வாக்குகளையும், திமுக வேட்பாளர் 1.1 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். இதனையடுத்த 2019ம் ஆண்டு தேர்தலில் எச்.வசந்தகுமார் 6.2 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார். ஆனால் 2021ம் ஆண்டு அவர் மறைந்ததையடுத்தையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன், விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.

எதிர் வரும் லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களை பொறுத்த அளவில் இந்த முறையும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் மீண்டும் களமிறக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக சார்பில், பொன்.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட இருக்கிறார். எப்படி இருப்பினும், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் சவாலானதாக இருக்கிறது.

ஏனெனில், சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். எனவே எம்எல்ஏ போனாலும் கட்சிக்கு செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், விஜயதாரணியின் விலகலை முன்னிலைப்படுத்தி இந்த முறை எப்படியாவது தொகுதியை வென்று விட வேண்டும் என்று பாஜக பிளான் போட்டுள்ளது. இப்படியாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டிய நிலவி வருகிறது.

தொகுதியின் அரசியல் தன்மையை பொறுத்த அளவில், கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை ஒட்டி இருப்பதால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தாக்கம் இங்கு வலுவாக இருக்கிறது. அதேநேரம், 1982ல் உருவான மண்டைக்காடு கலவரம் இந்துத்துவா சக்திகளை வேரூன்றி வளர செய்திருக்கிறது. இது அப்படியே பாஜகvsகாங்கிரஸ் என்கிற சூழலாக அரசியலில் பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+