நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதிப்பா கேள்வி கேளுங்க.. டென்ஷன் ஆன கே.எஸ். அழகிரி!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிளவு பற்றி கேள்வி கேட்க கூடாது என்பதற்காகவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் ஒன்றிணைத்து வந்துள்ளேன் என்று கூறினார். மலும் கேள்விகளை நன்றாக கேட்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 13 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பிரச்சார கூட்ட தொடக்க விழா குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

KS Alagiri clashes with Reporters

காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை அளித்துக் கொண்டிருந்தார் அழகிரி.

சந்தையில் மாடு வாங்குவது போல பேரம் பேசுகிறது தேமுதிக.. கே. எஸ். அழகிரி பொளேர் பொளேர்!சந்தையில் மாடு வாங்குவது போல பேரம் பேசுகிறது தேமுதிக.. கே. எஸ். அழகிரி பொளேர் பொளேர்!

ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உல்பூசல் குறித்து கேள்வியின் போது செய்தியாளர்களை பார்த்து இது போன்று கேள்விகளை கேட்க கூடாது என கூறிய அழகிரி காங்கிரஸ் கட்சியில் உள்ள பிளவு பற்றி கேள்வி கேட்க கூடாது என்பதற்காகவே அனைவரையும் ஒன்றிணைத்து வந்துள்ளேன். செய்தியாளர்கள் வெளியேறினால் நாங்கள் கூட்டம் தொடங்குவோம் என தெரிவித்தார்.

சரமாரி கேள்விகளால் சற்றே நிலை குலைந்த கே.எஸ். அழகிரி பின்னர் அமைதி அடைந்து செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார்.

English summary
TNCC president KS Alagiri clashed with reoporters for a while during he met the press.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X