Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட.. தமிழகத்தில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா?.. ஆச்சரியத்தில் மதுபிரியர்கள்.. எதுக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் பல கோடிகளை தாண்டுவது வழக்கம்.

இப்படி அரசுக்கு வருமானத்தை கொட்டி கொடுப்பதில் முதலிடம் பிடிக்கும் எங்களுக்கு டாஸ்மாக்கில் சரிவர வசதிகள் செய்து தருவதில்லை'' என்று குடிமகன்கள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். டாஸ்மாக் பார்கள் கொரோனா காரணமாக இப்போது செயல்படுவதில்லை.

ஆனால் பார்கள் இயங்கும் நேரத்தில் அங்கு விற்கப்படும் பொருட்களுக்கும், நொறுக்கு தீனிகளுக்கும் நிர்ணயித்த விலையை விட மிக அதிக விலை விற்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

கூடுதல் பணம் வசூலிப்பு

கூடுதல் பணம் வசூலிப்பு

இது தவிர மதுபானங்களுக்கு அரசு ஒருவிலை நிர்ணயித்து இருந்தால் டாஸ்மாக்கில் அதை விட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர் என்பது நீண்ட கால குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு மட்டும் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாகவும், இதுபற்றி பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த புகார்களை கேட்ட தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது.

அரசு உத்தரவு

அரசு உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.மதுவிற்பனைக்கு பற்றுசீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் இந்த உத்தரவை கடைபிடிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விதிமுறைகளை கச்சிதமாக பின்பற்றும் ஒரு டாஸ்மாக் கடையை பார்த்து குடிமகன்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை

கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முட்டைக்காடு பகுதியில் இந்த 'டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ''மதுபிரியர்கள் வாங்கும் மதுபானத்திற்கு ஏற்ப ரசீது வழங்கப்படும். இந்த கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை. விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்' என்று கூறி செல்போன் எண் குறிக்கப்பட்ட அறிவிப்பு அட்டைகள் கடையின் முகப்பு பகுதியில் தொங்க விடப்பட்டுள்ளது.

வாய் பிளந்த குடிமகன்கள்

வாய் பிளந்த குடிமகன்கள்

இந்த டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் ''என்ன.. நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா'' என்று ஒரு நிமிஷம் வாய் பிளந்து நிற்கின்றனர். அட்டையில் குறிப்பிட்டபடி இந்த டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மதுபானம் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இப்படி மாற வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்க்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+