பாத்ரூமில்.. வயசு பெண்களை.. கேடு கெட்ட கம்பெனி ஓனரை தூக்கிய போலீஸ்.. நாகர்கோவில் பரபரப்பு
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நாகர்கோவில் நபர் கைதானார்
நாகர்கோவில்: இளம் பெண்கள் பாத்ரூமுக்குள் சென்றால், ஆபீஸ் ரூமிலிருந்தே அதை திருட்டுத்தனமாக பார்ப்பாராம் கேடு கெட்ட சஞ்சு என்பவர்.. இப்போது "மாமியார்" வீட்டில் செம கவனிப்பில் இருக்கிறார்.
நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் சஞ்சு.. 29 வயதாகிறது.. கோட்டார் செட்டிகுளத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார்.. இதை ஆரம்பித்து 2 வாரம்தான் ஆகிறது.
புது சாப்ட்வேர் கம்பெனி என்பதால், ஏராளமான இளம்பெண்கள் இங்கு வேலையில் ஆர்வமுடன் வந்து சேர்ந்தனர்.. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வேலை பார்க்கும் பெண் ஒருவர் அங்கிருந்த பாத்ரூம் சென்றுள்ளார்.
அப்போதுதான், பாத்ரூமில் உள்பக்கமாக ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ந்துபோய்விட்டார்.. இதனால் பதறியடித்து கொண்டு வந்து, சக பெண் ஊழியர்களிடம் சொன்னார்.. இந்த விஷயம், கோட்டார் போலீசுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் சாப்ட்வேர் கம்பெனி ஓனர் சஞ்சுவை விசாரித்தனர்.. அப்போதுதான், இப்படி திருட்டுத்தனமாக இளம்பெண்களின் ஆபாச வீடியோக்களை எடுத்து, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு சம்பாதிக்க ஒரு பெரிய பிளான் வைத்திருந்து பரப்ப திட்டமிட்டது தெரியவந்தது இதையடுத்து சஞ்சுவை போலீசார் கைது செய்தனர். அவருடைய செல்போன், லேப்டாப்பையும் பறிமுதல் செய்தனர்.
அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழித்த மருந்து கம்பெனி ஊழியர்! காரணம் கேட்டால் ஷாக்
அந்த லேப்டாப்பை ஓபன் செய்து பார்த்தால், ஏகப்பட்ட ஆபாச படங்கள் இருந்துள்ளன.. பாத்ரூமில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவுடன், சஞ்சுவின் இந்த செல்போன் இணைக்கப்பட்டிருந்தது.. பெண்கள் பாத்ரூமுக்குள் சென்றால், சஞ்சு தன்னுடைய செல்போனிலேயே அதை பார்த்து கொள்வாராம்.. இவ்வளவும் போலீசாரிடம் சொல்லி உள்ளார்.. இதே நாகர்கோவிலில் காசி சமாச்சாரமே இன்னும் முடியாத நிலையில், இன்னொரு ஆபாசம் கிளம்பி உள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.