ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக இன்று நாகர்கோவில் வந்த மோடி, மாநில உரிமைக்காக போராடிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார்.
ஒருபுறம் தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களக்கான உரிமைகளை பறித்துக்கொண்டு, மறுபுறம் மாநில உரிமைகளுக்காக போராடிய அண்ணாவுக்கு தலைவணங்குவது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு ஆபத்து
மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அதுவும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில். இதற்கு முன்னரும் இப்படித்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர் காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, பின்னர் தொகுதி மறுவரையறையை அமல்படுத்த வேணடும் என்று சொல்லப்பட்டிருந்தது.
தொகுதி மறுவரையறை
ஆனால், 1971 மற்றும் 2001 என இரண்டு முறையும் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும்போது, வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கவில்லை. எனவே, 25 ஆண்டுகள் டைம் கொடுக்கப்பட்டது. 2026ம் ஆண்டுடன் இந்த கெடு முடிவடையும் நிலையில் இப்போதும் மக்கள் தொகையை வட மாநிலங்கள் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.
மக்கள் தொகை
எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தாதவரை, பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்காத மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அவசர கதியில் அமல்படுத முயன்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பலம் நாடாளுமன்றத்தில் குறையும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்காக குரல் கொடுத்து வரும் இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவில் ரோடு ஷோ மேற்கொள்ள வந்திருக்கிறார்.
மோடியின் செயல்
முன்னதாக அவர், அண்ணா சிலைக்கு மலர்தூவி தலை வணங்கி மரியாதை செலுத்தியிருந்தார். இதுதான் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடிய அண்ணாவை வணங்கிக்கொண்டே, தொகுதி மறுவரையறை போன்ற தமிழ்நாட்டு விரோத நடவடிக்களை எப்படி மேற்கொள்ள முடிகிறது? என திமுவினர் கேள்வி எழுப்பியிருக்கறது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்!












Click it and Unblock the Notifications