இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு குமரியில் அஞ்சலி.. மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பேரணி
Recommended Video
நாகர்கோவில்: குண்டுவெடிப்பில் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மும்மத்தை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையவும், இது போன்ற துயர சம்பவம் ஏற்படாமல் இருக்கவும் மெழுகுவர்த்தி ஏந்திய பொதுமக்கள் சமாதானத்தை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் உலக அளவில் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை இலங்கை மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் கண்டித்து வருகின்றன.
இந்நிலையில் இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கருப்புக் கொடி அணிந்தும் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஊர்வலமாக சென்றும் பொதுமக்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் ஊர்வலமாக கையில் தீவிரவாதத்திற்கு எதிரான பதாதைகளுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடினர்.
தொடர்ந்து தங்கள் கையில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியை ஓர் இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மும் மதங்களை சேர்ந்த மத குருமார்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications