கந்துவட்டி.. கொடுக்க முடியாமல் தவித்த லட்சுமி.. கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாங்கிய கடனுக்கு இரு மடங்கு வட்டி கட்டிய பின்னரும் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதோடு தகாத வார்த்தைகளால் கந்து வட்டிக்காரர் திட்டியதால் மனமுடைந்த லெட்மி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். கல் உடைக்கும் தொழிலாளியான இவரது மனைவி லெட்சுமி.

இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரிடம் இருந்து தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்றதாகவும் அதற்காக இது வரை 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாங்கிய கடனுக்கு இருமடங்கு வட்டி கட்டி கட்டிய நிலையில் இனி வட்டி கொடுக்க மாட்டேன் என்றும் முதல் தொகையை ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாகவும் வட்டிக்கு கொடுத்த மாதவனிடம் லெட்சுமி தெரிவித்துள்ளார். இதனை ஏற்று கொள்ளாத மாதவன் லட்சுமியின் வீட்டிற்கு சென்று கந்து வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த லட்சுமி வாங்கிய கடனுக்கு இரு மடங்கு வட்டி கட்டிய பின்னரும் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதோடு தகாத வார்த்தைகளால் திட்டிய கந்து வட்டிக்காரர் மாதவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த லட்சுமி திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்னையை தலையில் விட்டு தீ குளிக்க முயன்றார்.
இதனை கண்ட போலீசார் லட்சுமியின் கையில் இருந்த மண்ணெண்னை கேனை பறித்து அவரை மீட்டனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்து வந்த நிலையில் பெண் ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications