காதலி பேசாத ஆத்திரம்.. நள்ளிரவில் நண்பர்களுடன் சைக்கோ தனமான முடிவெடுத்த பாலாஜி.. பயங்கரம்!
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதலி பேசாததால் ஆத்திரத்தில் இருந்த இளைஞர், நண்பர்களுடன் இணைந்து குடிபோதையில் முதியவரை எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலாஜி என்ற அந்த இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு முழு போதையாகி உள்ளார். அத்துடன் போதையில் சாலையில் செல்லும் போது சாலையில் அமைதியாக படுத்து உறங்கிக்கொண்டிருந்த முதியவர் மீது காதலி மீதான கோபத்தை காட்டினார்.
நடுரோட்டில் முதியவரை காரணமின்றி எரித்து கொன்றார் பாலாஜி. அவருக்கு நண்பர்களும் உதவி உள்ளார்கள். இப்போது அனைவரும் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்,

படுத்து உறங்கினார்
நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரன் (62 வயது). இவர் சனிக்கிழமை இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.

லைட்டர் வாங்கி எரித்தனர்
அப்போது அங்கு குடிபோதையில் வந்த 5 இளைஞர்கள் முதியவரிடம் லைட்டர் வாங்கி இருக்கிறார்கள். பின்னர் அவர் மீதே தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்க்ள.

பிடிப்பட்டனர்
இதில் முதியவரை கொன்றதாக மதுரையை சேர்ந்த பாலாஜி, லங்கேஸ்வரன், பொன்ராஜ், லட்சுமணன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோபத்தில் கொலை
பாலாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.. திடீரென அந்த பெண் பாலாஜியிடம் பேசாததால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் சென்றபோது சாலையில் படுத்திருந்த முதியவரை கொலை செய்தது தெரியவந்தது.

நாகர்கோவிலில் சோகம்
இதையடுத்து இளைஞர்கள் அனைவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலி பேச மறுத்ததால் சாலையில் உறங்கி கொண்டிருந்த முதியவரை எரித்துக் கொன்ற சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications