நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காதலி பேசாத ஆத்திரம்.. நள்ளிரவில் நண்பர்களுடன் சைக்கோ தனமான முடிவெடுத்த பாலாஜி.. பயங்கரம்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதலி பேசாததால் ஆத்திரத்தில் இருந்த இளைஞர், நண்பர்களுடன் இணைந்து குடிபோதையில் முதியவரை எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலாஜி என்ற அந்த இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு முழு போதையாகி உள்ளார். அத்துடன் போதையில் சாலையில் செல்லும் போது சாலையில் அமைதியாக படுத்து உறங்கிக்கொண்டிருந்த முதியவர் மீது காதலி மீதான கோபத்தை காட்டினார்.

நடுரோட்டில் முதியவரை காரணமின்றி எரித்து கொன்றார் பாலாஜி. அவருக்கு நண்பர்களும் உதவி உள்ளார்கள். இப்போது அனைவரும் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்,

படுத்து உறங்கினார்

படுத்து உறங்கினார்

நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரன் (62 வயது). இவர் சனிக்கிழமை இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.

லைட்டர் வாங்கி எரித்தனர்

லைட்டர் வாங்கி எரித்தனர்

அப்போது அங்கு குடிபோதையில் வந்த 5 இளைஞர்கள் முதியவரிடம் லைட்டர் வாங்கி இருக்கிறார்கள். பின்னர் அவர் மீதே தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்க்ள.

பிடிப்பட்டனர்

பிடிப்பட்டனர்

இதில் முதியவரை கொன்றதாக மதுரையை சேர்ந்த பாலாஜி, லங்கேஸ்வரன், பொன்ராஜ், லட்சுமணன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோபத்தில் கொலை

கோபத்தில் கொலை

பாலாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.. திடீரென அந்த பெண் பாலாஜியிடம் பேசாததால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் சென்றபோது சாலையில் படுத்திருந்த முதியவரை கொலை செய்தது தெரியவந்தது.

நாகர்கோவிலில் சோகம்

நாகர்கோவிலில் சோகம்

இதையடுத்து இளைஞர்கள் அனைவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலி பேச மறுத்ததால் சாலையில் உறங்கி கொண்டிருந்த முதியவரை எரித்துக் கொன்ற சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Near Nagercoil, the young man, who was angry that his girlfriend did not speak, set fire to the old man while he was drunk with friends. Five people have been arrested in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X