சாதாரண பதவின்னு நினைக்காதீங்க.. அண்ணா வார்டு உறுப்பினராக போட்டியிட்டவர்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
நாமக்கல் : திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி எனத் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பில் நாமக்கல்லில் நடைபெற்று வரும் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். தற்போது சிறப்புரையாற்றி வருகிறார்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பெரியார், அண்ணா போன்றவர்கள் உள்ளாட்சி பதவிகளின் மூலம்தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் எனக் குறிப்பிட்டார்.

நாமக்கல்லில் மாநாடு
தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டமேட்டில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

மக்களாட்சியின் உயிர்நாடி
இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல. எத்தனை வீண்பழிகள், தடைகள், அத்தனையையும் தாண்டி பெண்களாகிய நீங்கள் வந்திருக்கிறீர்கள். எவ்வளவு கவனத்தோடு உழைத்து இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறீர்களோ அதே கவனத்தோடு இந்தப் பொறுப்பில் உழைக்க வேண்டும். அமைச்சர், எம்.பி. எம்.ல்.ஏ போல பெரிய பொறுப்பா இது? உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி.

பெரியார் வகித்த பதவி
உலக சிந்தனையாளர்களில் ஒருவராகப் போற்றப்படக்கூடிய தந்தை பெரியார், ஈரோடு நகர்மன்ற தலைவராகவே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் . இந்தியாவில் உயர்ந்த பதவிகளை வகித்த மூதறிஞர் ராஜாஜி சேலம் நகராட்சித் தலைவராக தனது மக்கள் பணியை தொடங்கியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து நல்ல பல திட்டங்களைக் கொண்டுவந்த பெருந்தலைவர் காமராஜர் விருதுநகர் நகராட்சி தலைவராகவே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

அண்ணா வார்டு உறுப்பினராக போட்டி
இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர். இன்று முதலமைச்சராக இருக்கும் நானும் சென்னை மாநகர மேயராக இருந்துள்ளேன். இன்று அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு லால்குடி நகராட்சித் தலைவராக இருந்தவர். இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.

மக்கள் பணிகளின் முதல் படி
மக்கள் பணிகளின் முதல் படி என்பது உள்ளாட்சி அமைப்புகள்தான், அந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகத்தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றுவதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதற்கான பயிற்சிப் பாசறையைத்தான் நாமக்கல்லில் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம். தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம். தமிழகத்தின் அனைத்து ஊர்களும் மாற வேண்டும். அனைத்து மாவட்டங்களும், ஊர்களும் வளர வேண்டும். அது உங்களின் கைகளில் உள்ளது." எனப் பேசினார்.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications