நாமக்கல் விஏஓ தரமான சம்பவம்.. திரண்ட அரசு அதிகாரிகள்.. அப்போ வாரிசு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ்?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை வைத்து, மற்ற விஏஓ-க்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.. இதனால், வருவாய்த்துறை பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.. என்ன நடந்தது?
நாமக்கல் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் , அரசுக்கு சொந்தமான கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த, 19ம் தேதி, நாமக்கல் ஆர்டிஓ பார்த்தீபன் தலைமையிலான வருவாய்த்துறையினர், உடனடியாக போலீசாருடன் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கல்குவாரியிலிருந்து ஓட்டம்
அதிகாரிகளை பார்த்ததுமே, அங்கு கல்குவாரியில் கற்களை உடைத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், வாகனங்களின் டிரைவர்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.. இதையடுத்து, குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பாறைகளை உடைக்கும் ஹிட்டாச்சி இயந்திரம், கம்ப்ரசர் டிராக்டர்கள், லாரிகள், டூவீலர் உள்பட 23 வாகனங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்ததாக சிவக்குமார், சுபாஷ், விசிபி பழனிசாமி, மற்றொரு பழனிசாமி , சந்துருமலை ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தலைமறைவாகி இருக்கும் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்..
அரசுக்கு தெரியப்படுத்தாதது ஏன்
இதனிடையே, கல்குவாரியில் ஆய்வு செய்வது குறித்து, அரசுக்கு முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? என கூறி, கொண்டமநாயக்கன்பட்டி விஏஓ ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி விஏஓ கோகிலா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நாமக்கல் ஆர்டிஓ உத்தரவிட்டார். இதேபோல் கனிமவளத்துறையிலும், உதவி புவியியல் ஆய்வாளர் ஒருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதைக்கேட்டு மாவட்ட விஏஓக்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியடைந்தனர்.. கடமையை செய்த விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தது சரியில்லை, அவர்களது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இவர்களிடம் ஆர்.டி.ஓ., பார்த்தீபன், பேச்சுவார்த்தை நடத்தினார்.. கலெக்டரிடம் தெரிவித்து இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி சொன்னார்.
அதிர்ந்த விஏஓக்கள்
ஆனாலும், சஸ்பெண்ட் உத்தரவை சொன்னபடி ரத்து செய்யாததால், நேற்று 2ம் நாளாக, ஆர்டிஓ அலுவலகத்தில், விஏஓக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இருப்பிடம், வருவாய், ஜாதி சான்றுகள், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, அடங்கல், பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த சான்றிதழையும் பொதுமக்கள் பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்களாம்.. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications