அதிர்ச்சியில் ராசிபுரம்.. திமுக பெண் கவுன்சிலர், கணவன், மகளோடு தற்கொலை! அதிர வைக்கும் பரபர பின்னணி
நாமக்கல்: ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் பிரியா தனது கணவர் மற்றும் மகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தேவிப்பிரியா (வயது 46). இவரது அருண் லால் (வயது 53) நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகளான மோனிஷா (வயது 18) ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தேவிப்பிரியா ராசிபுரம் நகராட்சி 13 வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை இவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்து உள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தேவிப்பிரியா அவரது கணவர் அருண்லால், மகள் மோனிஷா ஆகியோர் தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே.செந்தில்குமார், போலீஸ் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவிப்பிரியாவின் கணவர் அருண்லால் நடத்தி வந்த நகைக்கடை வியாபாரம் கடந்த 6 மாதங்களாக கடும் நஷ்டத்தை சந்தித்ததாகவும் இதன் காரணமாக கடன் சுமையில் தவித்து வந்த குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கடன் பிரச்சனை ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, மறுபக்கம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு அதிலில் மீள முடியாமல் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளான தேவிப்பிரியாவும் அவரது கணவர் அருண் லாலும் இந்த துயர முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே பள்ளி மாணவியான தனது மகள் மோனிஷாவுக்கு இரவு விஷம் கொடுத்து உறங்க வைத்துவிட்டு கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் கிடைத்து உள்ளது. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானவுடன் முழு தகவல் தெரியவரும்.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள்












Click it and Unblock the Notifications