Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயர்ந்த பட்ச விலையில் நாமக்கல் முட்டைகள்.. கறிக்கோழி பண்ணையாளர்கள் பெரிய அதிரடி! இன்று முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் முட்டைகளுக்கும் எப்போதுமே பெரும் கிராக்கி உள்ளது.. எனினும், நாமக்கல் மற்றும் அம்மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முட்டை உற்பத்தி அதிகமாக இருப்பினும், தேசிய மட்டத்தில் மற்றும் மாநில வர்த்தக நிலைகளில் சில்லறை விலை உயர்வு, கொள்முதல் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முட்டை விலை குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன.. கிட்டத்தட்ட 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

Namakkal Egg Price

இதில் 40 சதவீதம் கேரள மாநிலத்திற்கும், மேலும் தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிச்சமுள்ள தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் மாநிலத்தின் பிற சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

நாமக்கல் முட்டைகள்

இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.. ஆனால், சமீபகாலமாகவே முட்டை விலைகள் உயர்ந்து வருகின்றன. அதிலும், தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் கடந்த 55 வருடங்களாக இல்லாத வகையில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ 7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் நடந்த NECC கூட்டத்தில் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை இன்று நவம்பர் 17ம் தேதி காலை முதல் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தது.

NECC எனப்படும் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.95லிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை இன்று நவம்பர் 17ம் தேதி காலை முதல் அமலுக்கு வருகிறது" என்று அறிவித்துள்ளது.

முட்டையின் விலை

முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். எனினும், இனி வரும் நாட்களில் முட்டைகள் உயர வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கொள்முதல் விலை உயர்வாலும் சில்லறை விலை உயருமா? என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.

குளிர் காலத்தில் விலை அதிகம்

பெரும்பாலும், குளிர்கால நேரங்களில் முட்டைக்கு தேவை அதிகமாகவே இருக்கும்.. எனவே குளிர்காலத்தில் முட்டையின் விலையும் அதிகமாகும் என்பதால், அந்த கலக்கமும் அதிகரித்துள்ளது.. எனினும், கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் முட்டை இந்த உயர்வுக்கு பின்னணியாக உள்ளதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே கோழி, ஆடுகள் விலை அதிகமாக இருக்கின்றன.. எனினும் புரோட்டீன் தேவைக்காக முட்டையை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய தேவையில் உள்ளனர்.. எனவே, இந்த கொள்முதல் விலை உயர்வு சாமானியர்களை பாதிக்காதவகையில் இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள்.

முட்டை விலை குறையுமா

விலை நிலைத்தன்மை குறைவாக இருந்த நிலையில், தற்போதைய உயர்வு உற்பத்தியாளர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும். அதே நேரத்தில், அதிக வருமானம், கோழி உணவு, மருந்துகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை முழுமையாக ஈடுபடுத்துவதற்கும் உதவுகிறது.

நாமக்கல்லில் 6 ரூபாய் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான கடைகளில் 7 ரூபாய்க்கு முட்டைகள் விற்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. பொருளாதார சுமை அதிகரித்து வரும் நிலையில், உணவு பொருள் விலை உயர்வு, அதிலும் சத்தான முட்டையிலும் விலை உயர்வு காணப்படுவது கவலைகளை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+