Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயமுறுத்தும் பறவைகாய்ச்சல்..ஹை அலர்ட்டில் நாமக்கல்..முட்டை, கோழி சாப்பிடலாமா வேணாமா? முக்கிய அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் கோழிகள், முட்டைகள் அதிகமாக உற்பத்தி செய்யும் நாமக்கல்லிலும் பீதி அதிகரித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரே களத்தில் இறங்கி ஆய்வு செய்து வரும் நிலையில், இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதியானது உச்சத்தில் இருக்கும் நிலையில், அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Important order of district collector regarding bird flu outbreak in Namakkal

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் நோய் பரவும் அபாயம் இருப்பதால் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறவைக் காய்ச்சல்: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள வாத்து மற்றும் கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அந்த மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்திலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கோழிப்பண்ணைகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் எச்சரிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இருக்கும் நிலையில் அங்கு சுமார் ஆறு கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் ஐந்து கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு அதில் ஒரு கோடி முட்டைகள் கேரளாவிற்கு நாள்தோறும் அனுப்பப்படுகின்றன. இறைச்சிக்காக கோழிகளும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் நிலையில் நிலையில் வாகனங்கள் மூலம் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிப்பு இல்லை: அதே நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. கோழி பண்ணைகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வாகனங்களும் கிரிமி நாசினி தெளித்ததற்கு பிறகு பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் உமா நேரடியாக களத்தில் இறங்கி கோழிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆட்சியர் அறிவுறுத்தல்: மேலும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றார். இந்நிலையில் நாமக்கல்லில் பண்ணைகளில் பணிபுரிவோர் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு ஆட்சியர் உமா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இறைச்சிகளை நன்கு சுத்தம் செய்து நன்கு வேகவைத்த பிறகு விற்பனை செய்ய வேண்டும். கோழிப் பண்ணைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளில் பணிபுரிவோர் உரிய பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

எச்சரிக்கை: கோழிப்பண்ணைகளில் இருக்கும் வாகனங்கள் உள்ளும் வெளியே செல்லும்போது கிருமி நாசினி தெளித்து கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும், பண்ணைகள் முழுவதும் குளோரின் டை ஆக்சைடு தெளிக்கப்பட்டு உயிரி நீக்கம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மேலும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்போர் உடனடியாக அரசு மருத்துவமனையை அடக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+