வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அதிரடி வழக்குப் பதிவு
நாமக்கல்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவர் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜாவின் நெருங்கிய உறவினராகும்.
இந்தநிலையில் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக ராசிபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரோஜாவிடம் பணம்
முன்னாள் அமைச்சர் சரோஜா என்னையும், என் மனைவியையும் அழைத்து ராசிபுரத்தில் வீடு கட்ட வேண்டும். எனவே அதற்கு பணம் வாங்கி கொடுத்தால் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று தன்னிடம் கூறியதாகவும், இதனை நம்பி தனது மனைவி 15 பேரிடம் ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி அதில் ரூ.50 லட்சத்தை முதற்கட்டமாக எனது வீட்டில்வைத்து சரோஜாவிடம் வழங்கினேன் என்றும் புகாரில் குணசீலன் தெரிவித்திருந்தார்.

வேலை வாங்கி கொடுக்க
இதையடுத்து 2வது கட்டமாக ரூ.26 லட்சத்து 50 ஆயிரத்தையும் வழங்கியதாகவும், ஆனால் சரோஜா தான் கூறியபடி என்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் என்றும் குணசீலன் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

யார் யார் எவ்வளவு பணம்
பின்னர் அவர் அளித்த பேட்டியில், பணம் கொடுத்தவர்கள் தன் மீது போலீசில் புகார் அளிப்பதாக கூறி வருவதாகவும் எனவே, ராசிபுரம் போலீசில் நான் புகார் அளித்துள்ளேன். அதில் யார்? யார்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விவரத்துடன் கூறி உள்ளேன் என்றும் குணசீலன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர்கள்
இந்த நிலையில் தற்போது சரோஜாவிற்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் முறைகேடு புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications