கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள்
நாமக்கல்: தமிழகத்தில் கிராவல் மண் குவாரிகளில் நடந்து வரும் முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி தெரிவித்துள்ளார். அனுமதி பெறாமல் அருகில் உள்ள பட்டா நிலங்களில் மணல் எடுத்தும், ஒரு யூனிட் கிராவல் மண்ணுக்கு ரூ.2 ஆயிரம், மணலுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7,500 பெற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் முறையான அனுமதி சீட்டு கொடுக்காமல், போலியான நடைச்சீட்டு கொடுத்து, அரசுக்கு தினசரி பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார்கள் என குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கிராவல் மண், சவடு மண் எடுக்கப்படுகிறது. இதற்காக கனிமவளத்துறையிடம் அனுமதி பெற்று எடுக்கிறார்கள். அதேநேரம் பட்டா இடங்களிலும், அனுமதி பெறாத அரசு புறம்போக்கு இடங்களிலும் சட்ட விரோதமாகவும், முறைகேடாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டும் வருகிறது.

அத்துடன் அனுமதி பெறாமல் அருகில் உள்ள பட்டா நிலங்களில் மணல் எடுத்தும், ஒரு யூனிட் கிராவல் மண்ணுக்கு ரூ.2 ஆயிரம், மணலுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7,500 பெற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் முறையான அனுமதி சீட்டு கொடுக்காமல், போலியான நடைச்சீட்டு கொடுத்து, அரசுக்கு தினசரி பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார்கள். கிராவல் மண் மற்றும் சவடு மண் எடுக்க செல்லும் லாரிகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு ராயல்டி என ரூ.700 ரூபாய் வீதம் அடாவடியாக வசூலித்து வருகிறார்கள்.
ஒரு லாரிக்கு ஒரே நடைச்சீட்டு மட்டும் கொடுத்து, அதை வைத்துக்கொண்டு மூன்று நடை எடுத்து செல்ல வற்புறுத்துகிறார்கள். அவ்வாறு செல்லும்போது வருவாய் துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்கிறார்கள். அந்த சோதனையில் போலி நடைச்சீட்டு வைத்துள்ளதாக கூறி வழக்குகள் பதிவு செய்கிறார்கள். தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைக்கிறார்கள். இதனால் மணல் லாரி தொழில் முடங்கி போய் இருக்கிறது.
இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துறையின் அமைச்சர் துரைமுருகன், கனிமவளத்துறை செயலாளர், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நேரில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார்
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு
- பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு
- 2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா
- நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!
கடந்த 2 ஆண்டுகளாக மட்டும் கிராவல் மண் குவாரிகளில் தமிழக அரசுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கனிம வளத்துறையில் ஊழல் செய்தவர்கள் மீதும், இதற்கு துணை போன அரசு துறை அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆளுநரை நேரில் சந்தித்து, தனியார் இயற்கை கனிமவள கொள்ளை மற்றும் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?













Click it and Unblock the Notifications