Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் வெள்ளையர் இன முதியவரை போலீசார் கீழே தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து முதியவரை கீழே தள்ளிவிட்ட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்குப் பின் மிகப் பெரும் கிளர்ச்சி நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் கறுப்பர் இன மக்களுக்கு எதிரான அத்தனை ஒடுக்குமுறைகளுக்கு நீதி கேட்கும் வகையில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.

கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீசாரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தால்தான் இப்போது அமெரிக்காவின் அத்தனை நகரங்களுமே பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

தொடர் போராட்டங்கள்

தொடர் போராட்டங்கள்

கறுப்பர் இன மக்களின் நியாயமான இந்த போராட்டங்களுக்கு முன் வெள்ளையர் இனத்தவரும் பெருந்திரளாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போனது. அமெரிக்கா அதிபர் டிரம்ப்கூட, வெள்ளை மாளிகையில் பங்கரில்தான் பதுங்கி இருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருந்தன.

போராட்ட முழக்கமான இறுதி சொல்

போராட்ட முழக்கமான இறுதி சொல்

மரணிப்பதற்கு முன்னதாக ஜார்ஜ் ஃப்ளாய்ட் பயன்படுத்திய சுவாசிக்க முடியவில்லை என்ற சொல், இப்போது போராட்ட முழக்கமாக மாறி இருக்கிறது. எங்களால் உரிமையை- ஜனநாயகாத்தை சுவாசிக்க முடியவில்லை என்கிற முழகம் அமெரிக்கா தேசம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இடைவிடாத போராட்டங்கள் தொடருகின்றன.

வன்முறை போராட்டங்கள்

வன்முறை போராட்டங்கள்

இந்த போராட்டங்கள் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்திருக்கின்றன. செயின்ட் லூயிஸ் நகரில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த 4 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அமைதிவழி போராட்டங்கள் வன்முறையை நோக்கிச் செல்வது அங்கு பேரச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Recommended Video

    அமெரிக்காவில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் நமது செய்தியாளர்
    மூர்க்கத்தனமான போலீசார்

    மூர்க்கத்தனமான போலீசார்

    இந்நிலையில் நியாகரா சதுக்கத்தில் நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளையர் இன முதியவர் ஒருவர் போலீசாரால் கீழே தள்ளிவிடப்பட்டார். அவர் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பப்பல்லோ நகரைச் சேர்ந்த போலீசார்தான் இந்த மூர்க்கத்தனமான செயலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாக பப்பல்லோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+