3 குழந்தைகள் பெற்றும் குறையாத அழகு.. பொறாமையில் பொசுங்கிய மாஜி காதலன்.. அடுத்து நடந்த கொடுமை!
கர்ப்பிணி பெண்ணின் சடலம் ப்ரிட்ஜில் இருந்து மீட்கப்பட்டது
நியூயார்க்: 3 குழந்தைகளுக்கும் தாயாகியும் குறையாத அழகினை கண்டும், தனக்கு கிடைக்காத காதலி இனியும் சந்தோஷமாக இருக்க கூடாது என்ற பொறாமையாலும், முன்னாள் காதலன் இப்படி ஒரு கொடூர முடிவை எடுத்துவிட்டார்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண் செலினா ஆன்... கல்யாணமானவர்.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இப்போது 3வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் செலினா.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் செலினாவை காணவில்லை.. இதனால் பதறி போன குடும்பத்தினர் பல இடங்களில் செலினாவை தேடினார்கள்.. எங்கேயும் கிடைக்கவில்லை.. அதனால் போலீசில் சென்று புகார் தந்தனர்.
அந்த புகாரின்பேரில் போலீசாரும் செலினாவை தேடி வந்தனர்.. அவரது செல்போன் நம்பரையும் டிரேஸ் செய்து பார்த்தனர்.. எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. விசாரணையின்போதுதான் செலினாவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவந்தது.. அவர் பெயர் வில்லியம் ஜேம்ஸ்.
கல்யாணத்துக்கு முன்பு செலினாவும் அவரும் பல இடங்களில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடந்த திங்கள் கிழமை செலினாவின் முன்னாள் காதலனின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.. அங்குள்ள ரூம்களில் தேடி பார்த்தும் செலினா இல்லை.. இறுதியாக கிச்சனுக்கு சென்று அங்கிருந்த ஃப்ரிட்ஜை டக்கென திறந்தனர்.
அப்போது செலினாவின் சடலம் பொத்தென்று ஃப்ரிட்ஜில் இருந்து விழுந்தது.. செலினாவின் கழுத்து, முகத்தில் ஏராளமான காயங்கள் இருந்தன.. மிக கொடூரமாக கொன்று பிரிட்ஜில் பிணத்தை வைத்திருந்தார் வில்லியம் ஜேம்ஸ்.. இதை பார்த்து ஷாக் ஆன போலீசார் ஜேம்ஸை கைது செய்தனர்.
செலினா தனக்கு கிடைக்காத காரணத்தினால் இவ்வாறு கொலை செய்ததாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. எனினும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்றில் சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்ணின் மரணம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications