அமெரிக்காவை விடுங்க.. பாகிஸ்தான் உடன் நெருக்கமான.. இந்தியாவின் "கூட்டாளி".. பெரிய சிக்கல்?
நியூயார்க்: சவுதி அரேபியா உடன் பாகிஸ்தான் மேற்கொண்டு உள்ள ஒப்பந்தம் இந்தியாவிற்கு பெரிய சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த நிகழ்வை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், அனைத்துத் துறைகளிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. பாகிஸ்தான் உடன் அமெரிக்கா நெருக்கமாக நிலையில் தற்போது சவுதி அரேபியாவும் பாகிஸ்தான் உடன் டீலிங் போட்டு உள்ளது.
சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ரியாத்தில் ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்படும் பட்சத்தில், அது மற்ற நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம்
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் ஆகியோர் ரியாத்தில் நேற்று சந்திப்பு நடத்தினர் இந்த நிகழ்வுக்குப் பிறகு, இரு நாடுகளுக்குமிடையே எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கூட்டாகப் பதிலளிக்கும் வகையில் ராஜதந்திர ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா, இந்த நிகழ்வை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், அனைத்துத் துறைகளிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அறிவித்தது.
இந்த ஒப்பந்தம் எங்களை எப்படி பாதிக்கும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம். இதன் தாக்கங்களை ஆய்வு செய்வோம். எங்கள் தேசிய பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் இது எப்படி தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வு செய்வோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும், அனைத்துத் துறைகளிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு உறுதியாக உள்ளது, என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு அளித்த பதிலில் கூறினார்.
பாகிஸ்தான் சவுதி அரேபியா மோதல்
இந்த 'ராஜதந்திர பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்' பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் சவுதி அரேபிய பயணத்தின்போது புதன்கிழமை கையெழுத்தானது. இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்கள் மீது கத்தாரில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நேட்டோ போன்ற கூட்டணியை உருவாக்க 40 இஸ்லாமிய நாடுகள் கலந்துகொண்ட தோஹாவில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில ஊடக அறிக்கைகளின்படி, இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு திறந்துள்ளது.
சவுதி பிரஸ் ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஒப்பந்தம்... இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அம்சங்களை வளர்ப்பதையும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான கூட்டுத் தடுப்பு திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாடுகளை இந்தியா அறிந்திருப்பதாகவும், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் நீண்ட காலமாகவே நடந்து கொண்டிருப்பதாகவும் ஒப்புக்கொண்டது.
"சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான செய்திகளை நாங்கள் பார்த்தோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஏற்பாட்டை முறைப்படுத்தும் இந்த வளர்ச்சி பரிசீலனையில் இருப்பதை அரசு அறிந்திருந்தது," என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications