எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கோவாக்சின் தடுப்பூசி அங்கீகார முடிவு.. உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?
கோவேக்சின் தடுப்பூசி பயன்பாடு குறித்து அடுத்த வாரம் முடிவு தெரியவரும் என்கிறார்கள்
நியூயார்க்: கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 6 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.. இதில், பிரிட்டன் - ஸ்வீடன் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியானது, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்திசெய்யப்பட்டு அதிக அளவில் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

அதேபோல, ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது... ஆனால், இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை... பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.
அதனால், கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது... கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் உயர்நிலை கூட்டமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.. அந்த கூட்டங்களில் முக்கிய ஆலோசனைகளும் நடந்து வருகின்றன...
இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. கோவேக்சின் தரமானதா? பாதுகாப்பானதா? பயனுள்ளதா? என்பதை நிபுணர் குழு ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இந்தியாவில் 25 இடங்களில் நடத்தப்பட்டது. அதுகுறித்த அறிக்கையில், "3-ம் கட்ட பரிசோதனை 18 - 98 வயதுக்குட்பட்ட 130 பேரிடம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 12% பேருக்கு பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 0.5% பேருக்கு சற்று தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட்டன... பிற கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்குத் தீவிர பக்கவிளைவுகள் குறைவாகவே காணப்படுகிறது.
தீவிர அறிகுறிகளுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 93.4% செயல்திறன் கொண்டுள்ளது. தற்போது பரவியுள்ள டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அறிகுறிகளுள்ள தொற்றுக்கு எதிராக 77.8% செயல்திறன் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அந்த தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications