இன்னும் 1 வருடத்தில்.. டிரம்ப்பின் கொட்டத்தை அடக்க போகும் 5 நாடுகள்.. பிரிக்ஸ் எடுத்த பிரம்மாஸ்திரம்
நியூயார்க்: அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, BRICS கூட்டமைப்பு நாடுகள் புதியதொரு டிஜிட்டல் நாணயத்தை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த டிஜிட்டல் நாணயத்தின் வருகை உலக நாணய சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் நாணயம்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம்.

கடந்த 2023ம் வருடம் நடக்கும் கூட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.இதன் மூலம் உலகின் 30 சதவிகித பொருளாதாரத்தை பிரிக்ஸ் நாடுகள் பூர்த்தி செய்ய உள்ளன.
விரிவாக்கப்பட்ட BRICS இன் GDP (தற்போதைய நிலை).
பிரேசில்: $2.1 டிரில்லியன்
ரஷ்யா: $2 டிரில்லியன்
இந்தியா: $3.7 டிரில்லியன்
சீனா: $19.3 டிரில்லியன்
தென்னாப்பிரிக்கா: $0.4 டிரில்லியன்
அர்ஜென்டினா: $0.6 டிரில்லியன்
எகிப்து: $0.4 டிரில்லியன்
எத்தியோப்பியா: $0.15 டிரில்லியன்
ஈரான்: $0.36 டிரில்லியன்
சவுதி அரேபியா: $1 டிரில்லியன்
அமீரகம்: $0.5 டிரில்லியன்
மொத்தம்: $30.5 டிரில்லியன் (உலகப் பொருளாதாரத்தில் 30%)
பிரிக்ஸ் கரன்சி
இதில் பிரிக்ஸ் கரன்சி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் ஆலோசனை செய்யப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, BRICS கூட்டமைப்பு நாடுகள் புதியதொரு டிஜிட்டல் நாணயத்தை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன.
பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். இதைத்தான் தற்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்து உள்ளது.
BRICS நாடுகளுடனான வர்த்தகம்
முன்னதாக, ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க வங்கிகளுக்கு முன்அனுமதி தேவையில்லை. இனி, வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் இந்திய ரூபாயைப் பயன்படுத்தி சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் மூலம் வர்த்தக செட்டில்மென்டுகளை மேற்கொள்ளலாம்.
இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ தங்கள் நாணயத்தை அமெரிக்க டாலராக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக தங்கள் வோஸ்ட்ரோ கணக்கில் உள்ள இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம். இது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.
டாலருக்கு மாற்று
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களின் மீது 50% வரி விதித்ததற்குப் பிறகு இந்த கொள்கை அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாயை வலுப்படுத்தும் இம்முயற்சி, அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசின் நேரடிப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
BRICS நாடுகளுடன் மட்டுமல்லாமல், இந்திய ரூபாயில் நேரடியாகப் பணம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும் சுற்றறிக்கையை இந்தியா பல நாடுகளுக்கும் அனுப்பி உள்ளது. இது இந்தியாவின் சர்வதேச வர்த்தக நிலையில் முக்கிய பங்காற்றுவதோடு, உலகச் சந்தைகளில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அடங்காத கிம் ஜாங் உன்.. 10 ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! பெரும் பதற்றம் -
Kharg Island: ஈரானின் ”மணிமகுடம்” அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா.. கார்க் தீவில் அப்படி என்னதான் இருக்கிறது? -
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்.. சீனாவுக்கு சிக்னல் கொடுத்த டிரம்ப்.. பதற்றத்தில் ஈரான் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications