ஆட்டத்தை ஆரம்பித்த சீனா.. உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. மூளைக்கார பிளான்.. என்ன நடக்குது?
நியூயார்க்: உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடான சீனா, அமெரிக்க டாலரை சார்ந்திருக்கும் தனது கையிருப்பை குறைக்கும் நோக்கில், தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களுக்கான விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை, சீன மக்கள் வங்கி (PBOC) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சீனா மிக எளிதாக தங்கம் வாங்க முடியும். அதை நகைகளாக மாற்றி எளிதாக விற்பனையும் செய்ய முடியும். இந்த வரைவு திட்டத்தின்படி, விரைவான ஒப்புதல் அமைப்பான "பலதரப்பு பயன்பாட்டு அனுமதிச் சீட்டுகள்" (multi-use permits) வழங்கும் துறைமுகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சீனா உத்தேசித்துள்ளது. மேலும், இந்த அனுமதிச் சீட்டுகளின் கால அளவை ஒன்பது மாதங்களாக நீட்டிக்கவும், ஒரு சீட்டை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதற்கான வரம்புகளை நீக்கவும் சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
சீனாவின் தங்கம் திட்டம்
இந்த நடவடிக்கை, 2016-ஆம் ஆண்டு PBOC எடுத்த ஒரு முயற்சியின் தொடர்ச்சியாகும். அப்போது, எல்லை தாண்டிய தங்க வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக ஆவணப்பணிகளைக் குறைத்து, இறக்குமதியை விரைவுபடுத்த சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டது. சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து தனது தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் சேர்த்து, தொடர்ந்து பத்தாவது மாதமாக தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. அதேசமயம், முதலீட்டுத் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான உள்நாட்டு தேவையும் வலுவாக உள்ளது.

மத்திய வங்கிகளின் கொள்முதல், அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் இந்த ஆண்டு தங்கத்தின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இடையில் கொஞ்சமாக தங்கத்தை மார்க்கெட்டில் விற்ற சீனா மீண்டும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் மத்திய வங்கி, மே மாதத்தில் தனது தங்க இருப்பை பல மாடனுக்கு அதிகரித்ததாக தகவல் வெளியிட்டது. இந்த நடவடிக்கை, தங்கத்தின் மீதான சீனாவின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
தங்க இருப்பு சேகரிப்பில் சீனாவின் வியூகம்
கடந்த ஆண்டில் தங்கத்தை வாங்குவதை சீன மத்திய வங்கி தீவிரமாக கையாண்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தின் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் இருப்பு அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. அதோடு சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரவும் காரணமாக அமைந்து விடுகிறது.
சீனா தங்கம் வாங்குவதால் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயருகிறது. உலக தங்க கவுன்சிலின் முதுநிலை ஆய்வாளர் கிரிஷன் கோபால், மே மாதத்தில் கிட்டத்தட்ட 2 டன் தங்கம் சீனாவால் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 17 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. மொத்த தங்கத்தின் இருப்பு சீனாவில் 2,296 டன்னாக உயர்ந்துள்ளது என்று கிரிஷன் கோபால் தெரிவித்தார்.
மே மாதம் இறுதியில் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு 241.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் இது 243.59 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் கையிருப்புகளின் மதிப்பும் அதிகரித்தது.
முன்னதாக, சீன மக்கள் வங்கி 18 மாதங்கள் தொடர்ந்து விடமால் தங்கம் வாங்கியது. பின்பு ஆறு மாதங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தியது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு நவம்பர் மாதம் மீண்டும் தங்கத்தை வாங்கத் தொடங்கியது.
தங்கச் சந்தையில் சீனாவின் புதிய நடவடிக்கைகள்
சீனா தனது உள்நாட்டு தங்கச் சந்தையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் (SHFE), வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் தரகர்களையும் நேரடியாக சந்தையில் அனுமதிக்கும் என்று அறிவித்தது.
தற்போதைய விதிகளின்படி, வெளிநாட்டு தரகர்கள் மற்றும் பிற வர்த்தகர்கள் உள்நாட்டு இடைத்தரகர்கள் மூலம் வர்த்தகம் செய்ய வேண்டும். இனி, அவர்கள் நேரடியாக பரிவர்த்தனைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அமெரிக்க டாலர் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களில் மார்ஜினைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படும்.
ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் கொண்டு வந்துள்ள இந்த விதிகள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் வர்த்தகத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும். இதனால் சீனா இன்னும் அதிகமாக தங்கம் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
உலக அளவில் தங்கம் வாங்கும் நாடுகள்
சீனா மட்டுமன்றி உலகம் முழுக்க இருக்கும் மத்திய வங்கிகள் அடுத்தடுத்து தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாக இருந்தது, 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கி உள்ளனர்.
இந்தியா உட்பட உலகின் டாப் 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76% தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1% வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்த தொடங்கி உள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திர கொள்முதல் ஆகும்.
இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35% அதிகரித்து, FY20 இல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.
உலக தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications