கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் எப்போது கிடைக்கும் தெரியுமா?.. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்
கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைக்க உள்ளது
நியூயார்க்: கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது... இதையடுத்து நமது நாடடு தயாரிப்பான கோவேக்சினுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.
2 வருடத்துக்கு முன்பு சீனாவின் வுகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை மிரட்டி கொண்டிருக்கிறது..
இதன் வீரியம் குறைந்தபாடில்லை... தொற்றும் முழுவதுமாக ஒழியவில்லை... முதல் அலையைவிட 2வது அலை உலக மக்களை நிலைகுலைய செய்துவிட்டது.

உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.14 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. இதுவரை 21.86 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. அதேசமயம், இந்த தொற்று இதுவரை 49.13 லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது.. இன்னும் 1.78 கோடிக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில்தான் உள்ளனர்.. இதில், 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை சீரியஸாக உள்ளதாக செய்திகள் வருகின்றன.

சிகிச்சைகள்
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.. இந்தியா 2வது இடத்தில் உள்ளது... பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதுவரை இந்த தொற்றுக்கு சிகிச்சைகளும், தீர்வுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.. எனினும் தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு ஒரே தடுப்பாக நமக்கு உள்ளது.. அதனால்தான் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்தி கொண்டிருக்கின்றன.
Recommended Video

உலக சுகாதார நிறுவனம்
ஒருசில புதிய தடுப்பூசிகள் குறித்த ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது.. இதில், பாரத் பயோடெக் நிறுவனமானது, தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது.. ஆனால், இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் இதற்கு கிடைக்காமலேயே உள்ளது.. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம்பெறவில்லை.. இதற்காக, கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கேட்டு, உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது...

கோவேக்சின்
கோவேக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஹூ எனப்படும் உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது... இதை பற்றி அந்த அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சொன்னதாவது:

ஒப்புதல்ஒப்புதல்
"கோவேக்சின் தடுப்பூசியுடன் உலக சுகாதார நிறுவனமானது மிகவும் மிக நெருக்கமாக பயணித்து வருகிறது... தடுப்பூசிகளுக்கு அதிகமான ஒப்புதல் தர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.. அப்போதுதான், அதன்மூலம், அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும்" என்று தெளிவுபடுத்தி உள்ளார். இதனிடையே, ஐநாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.

உறுதி
அதில், "கடந்த செப்டம்பர் 27ம் தேதியே கோவாக்சின் தரப்பில் கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டிருந்தது.. அதை ஐநாவின் நிபுணர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.. அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அதில் விடைகள் இருப்பின் அடுத்த வாரம் இறுதி முடிவு கிடைக்கும்" என்று ஐநா சபையின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.. இதையடுத்து, கூடிய சீக்கிரம் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கிடைக்கும் என்பது இதன்மூலம் மீண்டும் தெளிவாகிறது.
-
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications