டிவிட்டரின் முக்கிய பொறுப்பிலிருந்து கழன்ற எலான் மஸ்க்! புதிய தலைமை அறிவிப்பு.. ஆனால் ஒரு டிவிஸ்ட்
நியூயார்க்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ட்விட்டரை வாய்கிய பின்னர் எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்த வருகிறார். இந்நிலையில் டிவிட்டரின் சிஇஓ பொறுப்பிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாகவும் புதிய சிஇஓ-வை நியமித்துள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார். ஆனால் அது யார் என்று கூறாமல் ட்விஸ்ட் வைத்துள்ளார்.
உலக பணக்காரர்கள் வரிசையில் முதலில் உள்ள எலான் மஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்தார். அப்போதுதான் தொடங்கியது பஞ்சாயத்து. அவர் கூறியதை போல பின்னாட்களில் டிவிட்டரை வாங்க பெரியதாக முனைப்பு காட்டவில்லை. இதனையடுத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வாங்கும் யோசனை இல்லை என்று கூறிவிட்டார். இது டிவிட்டரின் பங்குகளை பெரிதும் பாதித்தது. இதனையடுத்து டிவிட்டர் தரப்பு நீதிமன்றம் சென்றது.

இந்த பஞ்சாயத்துகளுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை மஸ்க் வாங்கினார். அவர் கைக்கு டிவிட்டர் சென்றவுடன் அவர் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை பழைய தலைமைகளை மாற்றியதுதான். உடடினாயாக தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் இதர உயர் அதிகாரிகளை பணியிலிருந்து விடுவித்தார். பின்னர் இவரே சிஇஓ-வாக பணியாற்ற தொடங்கினார். இது தவிர டிவிட்டரின் கடைநிலை ஊழியர்களின் பாதி பேரை வேலையை விட்டு துரத்தினார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் டிவிட்டரிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று இவர் கூறியிருந்ததுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தையும், லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் டிவிட்டர்தான் அரசியல் களத்தின் ரத்த பூமி. இப்படி இருக்கும்போது அதில் மாற்றம் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு எக்குத்தப்பாக எதையாவது இவர் செய்து வைத்துவிட போகிறார் என்கிற கவலை ஏற்த்தாழ அனைத்து டிவிட்டர் பயனாளர்களுக்கும் இருந்தது.

ஆனால் அவர் சில சிறிய மாற்றங்களைதான் மேற்கொண்டார். அதாவது டிவிட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு பணம் வசூலிப்பது. அதேபோல சம்பல் மற்றும் கோல்டன் நிற 'டிக்களை' அறிமுகப்படுத்துவது. அதாவது சாம்பல் நிற 'டிக்' அரசு சார்புடைய பேஜ்களுக்கு வழங்கப்படும். இதே கோல்டன் டிக், மீடியா பேஜ்களுக்கு வழங்கப்படும். எல்லாம் சரிதான் ஆனால் ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் நிர்ணயித்திருப்பது பெரும் விமர்சனங்களை உருவாக்கியது.
மட்டுமல்லாது கட்டணம் செலுத்தாதவரின் கணக்குகளிலிருந்து ப்ளூ டிக் அகற்றப்பட்டது. இப்படியா தமிழ்நாட்டின் பல்வேறு பிரபலங்களின் ப்ளூ டிக் அகற்றப்பட்டது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம், மஸ்க் டிவிட்டருக்கு புதிய சிஇஓவை அறிவித்திருப்பதாக ட்விட் செய்துள்ளார். இவர் 6 வாரத்தில் தனது பணியை தொடங்குவார் என்றும் கூறியுள்ளார். ஆனால் யார் அவர்? என்கிற பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் இது NBCUniversal-ன் உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மைகளின் தலைவரான லிண்டா யாக்காரினோவாகதான் இருக்க வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications