திருப்பூருக்கு நல்ல செய்தி வந்த உடனே... வங்கதேச இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்த அமெரிக்கா
நியூயார்க்: ஜவுளி துறையில் திருப்பூருக்கு கடும் போட்டி அளித்து வருகிறது வங்க தேசம். வங்கதேசத்தின் இறக்குமதி தான் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஜவுளிதுறைக்கு போட்டியாக இருக்கிறது. இந்த சூழலில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் வங்கதேசமும் வெளியிட்டிருக்கின்றன. அதில் ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் செயல்படப்போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளராக வங்கதேசம் உள்ளது. வங்கதேசத்தின் ஏற்றுமதியில் 80 சதவீதம் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியை சார்ந்தே உள்ளது. வங்கதேச வங்கி மற்றும் தேசிய வருவாய் வாரியத்தின் தரவுகளின்படி, வங்கதேசம் 2024 ஆம் ஆண்டில் சுமார் 8.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே சமயம் அதன் அமெரிக்க இறக்குமதி 2.2 பில்லியன் டாலராக இருந்தது. இதனால் வங்கதேசத்துடன் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய விரும்பிய டிரம்ப், அதிரடியாக வரியை உயர்த்தினார்.

ஏனெனில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஒரு தொழில் அதிபர் ஆவார். லாப நஷ்ட கணக்கு பார்த்தே ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தக உறவுகளை பேணி வருகிறார். இதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா, வியட்நாம், சீனா, பிரேசில் உள்பட பல நாடுகள் புதிய வரிகளை எதிர்கொண்டன. அந்த வகையில் வங்கதேசப் பொருட்களுக்கு 37 சதவீத வரி விகிதத்தை நிர்ணயித்திருந்தார். பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேச தயாரிப்புகளுக்கான வரி விகிதத்தை 20 சதவீதமாகக் குறைத்தார்.
இந்த சூழலில், 2024-ல் மாணவர்கள் புரட்சி செய்து அரசாங்கத்தைக் கவிழ்த்த காரணத்தால், அந்நாட்டு தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலையற்ற அரசாங்கம் மற்றும் புரட்சி காரணமாக முதலீடுகள் குறைந்தன. ஏற்றுமதியும் கடுமையாக சரிந்தன. இந்நிலையில் வங்கதேச தொழில் துறை தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இடைக்கால அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வர்த்தக உறவை மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் வங்கதேசமும் வெளியிட்டிருக்கின்றன. அதில் ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் செயல்படப்போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வங்கதேச தயாரிப்புகள் மீதான அமெரிக்காவின் "பரஸ்பர" வரிகளை 20 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைக்க உள்ளது என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் மூலம், "வங்கதேசத்தில் இருந்து வரும் சில குறிப்பிட்ட ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத பரஸ்பர வரி விகிதத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் ஒரு வழிமுறையை உருவாக்க" அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இனிமேல், ஒரு குறிப்பிட்ட அளவிலான இறக்குமதிகள் முன்னுரிமையை வங்கதேசம் பெற முடியும்.
ஆனால், இந்த அளவு என்பது அமெரிக்காவிலிருந்து வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்கத் தயாரிப்பு பருத்தி மற்றும் செயற்கை இழை போன்ற உள்ளீடுகளின் அளவைப் பொறுத்தே அமையும். ஜவுளிப் பொருட்கள் தவிர, பூஜ்ஜிய சதவீத "பரஸ்பர" வரியைப் பெறக்கூடிய பிற தயாரிப்புகளையும் அமெரிக்கா கண்டறிந்து அதனை கேட்கும். இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இரு தரப்பும் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு இது செயல்பாட்டுக்கு வரும் என்று வங்கதேசத்தின் இடைக்கால அரசுத் தலைவர் முஹம்மது யூனுஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
வங்கதேசத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் கூறுகையில், அமெரிக்க உள்ளீடுகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வரி விலக்குகள், எங்கள் ஆடைத் துறைக்கு கணிசமான கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
வங்கதேசத்தில் இருந்து தயாரிப்புகளைப் பெறும் அமெரிக்க ஆடை நிறுவனங்களில் புரூட் ஆஃப் தி லூம் , லெவி ஸ்ட்ராஸ் மற்றும் வி.எஃப் கார்ப் (VF Corp - இதன்கீழ் வேன்ஸ், டிம்பர்லேண்ட் மற்றும் தி நார்த் ஃபேஸ் போன்ற பிராண்டுகள் உள்ளன) ஆகியவை அடங்கும்.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications